மதுரை : திருமங்கலம் அருகே ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்த அதிகாரிகள் தலைமறைவான அரிசி ஆலை அதிபரை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழக்கோட்டைக்கு கிராமத்தில், செந்தில் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில் இயங்கி வருகிறது. இந்த ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்துள்ளதாக திருமங்கலம் வட்டாட்சியர் சிவராமனுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் , ஆய்வு செய்த சிவராமன் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு டன் ரேஷன் அரிசி மூடைகளையும் பறிமுதல் செய்தார். அப்போது ரைஸ்மில் அதிபர் அங்கிருந்து தலைமறைவானார்.
இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, உசிலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த மினி லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வந்தது தெரிய வந்ததையடுத்து, அதனையும் பறிமுதல் செய்து உணவு பொருள் தடுத்தல் பிரிவு துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மினி லாரி ஓட்டுநரும் லாரியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் வட்டாட்சியர் காவல் துறையில் புகார் அளித்து வாகன ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.
சுமாரான நடிகர் நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை…
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
This website uses cookies.