மதுரை : திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் கடலூரை சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் 4-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது நண்பருடன் வசித்து வந்தார். மேலும் இவர் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக செயல்பட்டு வந்தார். கடந்த 3 தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் தனது அறையிலேயே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவருடன் தங்கியிருந்த பயிற்சி மருத்துவரும், நண்பருமான கிருஷ்ணகிரியை சேர்ந்த ஹரிஹரன் நேற்று இரவு தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்குச் செல்ல மற்ற நண்பர்கள் ராம்பிரசாத்தை செல்போனில் அழைத்தபோது நீண்ட நேரமாக செல்போனை எடுக்காததால் ராம் பிரசாத்தின் அறைக்கே சென்று கதவை தட்டிப் பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ராம்பிரசாத் இருந்துள்ளார்.
இதையடுத்து அவரது நண்பர்கள் திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராம்பிரசாத்தின் உடலைப் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.