Categories: தமிழகம்

அதிகாலையில் நடந்த கோரமான விபத்து… ஈச்சர் வாகனம் மீது மோதிய கார் : 3 இளைஞர்கள் பலி!!!

அதிகாலையில் நடந்த கோரமான விபத்து… ஈச்சர் வாகனம் மீது மோதிய கார் : 3 இளைஞர்கள் பலி!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலை சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஈச்சர் வாகனம் ஒன்று எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி சாலையோரமாக உள்ள கடையின் அருகே நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது

பின்னர் அதே சாலையில் 5 பேர் பயணித்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஈச்சர் வாகனத்தின் பின்னால் மோதி, கார் பயங்கர விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் பலியாகினர்.மேலும் காரில் இருந்த 2 இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர்

தகவலை அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 இளைஞர்கள் பலத்த காயம் ஏற்பட்டு கவலைக்கிடமான உள்ள நிலையில், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்..

பின்னர் சம்பவ இடத்தில் காரில் உயிரிழந்த 3 இளைஞர்களின் உடல்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

காரில் பயணித்தவர்கள் திருப்பூர் அடுத்த வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சூளகிரி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் அதிகாலை சுமார் 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சூளகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

8 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

9 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

10 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

10 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

11 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

11 hours ago

This website uses cookies.