கிருஷ்ணகிரி அருகே மாணவ, மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இரு பாலர் மாணவ மாணவியர்கள் படிக்கும் இந்த அரசு பள்ளியில் 1000க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் ஓசூர் குறிஞ்சி நகர் பேஸ் 16 பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜுலு (45) என்பவர் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
கணித ஆசிரியர் கோவிந்தராஜுலு கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் 6ம் வகுப்பு மாணவி ஒருவரை மைதானத்தில் விளையாடும்போது, பின்புறமாக கட்டிப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலர் ரகுராமனிடம் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய கணித பாட ஆசிரியர் கோவிந்தராஜுலுவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.