கிருஷ்ணகிரி அருகே மாணவ, மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இரு பாலர் மாணவ மாணவியர்கள் படிக்கும் இந்த அரசு பள்ளியில் 1000க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் ஓசூர் குறிஞ்சி நகர் பேஸ் 16 பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜுலு (45) என்பவர் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
கணித ஆசிரியர் கோவிந்தராஜுலு கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் 6ம் வகுப்பு மாணவி ஒருவரை மைதானத்தில் விளையாடும்போது, பின்புறமாக கட்டிப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலர் ரகுராமனிடம் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய கணித பாட ஆசிரியர் கோவிந்தராஜுலுவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.