திருவாரூர் : திருவாரூர் நகராட்சி தேர்தலில் பேட்டியிடும் பாஜக வேட்பாளர் பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.
திருவாரூர் நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் பாஜக சார்பில் 8 வார்டுகளில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த வேட்பாளர்கள் 3,7,10 12,16 17,21,27 ஆகிய வார்டுகளில் திருவாரூர் நகராட்சி பொருத்தவரை பாஜகவினர் களம் காண்கின்றனர். இந்த நிலையில் திருவாரூர் பா.ஜ.க நகர பொதுச் செயலாளரான கணேசன் என்பவர் 21 வது வார்டு பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இவர் இன்று தனது வார்டுக்கு உட்பட்ட நெய்விளக்கு தோப்பு ஆற்றுப்பாலம், ராணுவ நகர் ,நேதாஜி சாலை மருதபட்டினம் சாலை ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆற்றுப் பாலம் அருகில் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கியவர் அங்கு உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்தி வாக்கு சேகரித்தார். மேலும் அவர் கடைக்காரரின் காலில் விழுந்தும் அவரிடம் ஆசி பெற்றும் வாக்கு சேகரித்தார்.
அவரைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்ற கணேசன் மூதாட்டிகள் மற்றும் தன்னை விட வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவருடன் பத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.