Categories: தமிழகம்

கிரஹப்பிரவேசத்தில் வந்த மொய்ப்பணம் ரூ.5.75 லட்சம் அபேஸ் : வீட்டை கட்டிய தொழிலாளிகளே கை வைத்தது அம்பலம்!!

கோவை : காளப்பட்டியில் கிரகப்பிரவேசத்தில் வந்த மொய்பணம் ரூ.5.75 லட்சம் கொள்ளைபோன சம்பவத்தில் வீட்டை கட்டிய தொழிலாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள காளப்பட்டி டைமண்ட் தாசன் அபார்ட் மெண்ட்டை சேர்ந்தவர் கெளதமன் (வயது 33). தனியார் நிறுவன உரிமையாளர்.

இவர் சமீபத்தில் காளப்பட்டி சிவா நகர் விரிவு பகுதியில் புதியதாக வீடு ஒன்றினை ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் வாங்கியுள்ளார். அன்றைய தினமே கிரகப்பிரவேசமும் நடைபெற்றுள்ளது.

கிரகப்பிரவேசம் முடிந்து மாலையில் உறவினர்கள் அனைவரும் சென்ற பின்னர் கெளதமனும், அவரது மனைவியும் செய்முறைப்பணம் வந்துள்ளதை எண்ணிப்பார்த்ததில் ரூ.5.75 லட்சம் இருந்துள்ளது.

அந்த பணத்தை கட்டிலில் வைத்து விட்டு கணவன், மனைவி இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். இதனை ஜன்னல் கண்ணாடி வழியாக அருகில் உள்ள வீட்டின் கதவை உடைத்து அதன் வழியே மாடி பால்கனி வழியாக சென்று திருடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கெளதமன் கோவில்பாளையம் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விளாங்குறிச்சி சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது,அவ்வழியே வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை விரட்டிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி(வயது 20), கார்த்திக்(வயது 25) என்பதும் பணத்தை பறிகொடுத்த கெளதமனின் புதிய வீட்டில் கட்டிட பணிகளை மேற்கொண்ட தொழிலாளிகள் என்பதும், கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.5.75 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

60 minutes ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

2 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

4 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

4 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

5 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

6 hours ago

This website uses cookies.