திருவள்ளூர் : பொன்னேரி அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் எனக்கூறி 46 குடும்பங்களைச் சார்ந்த 136 வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சயனாவரம் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 28. ஏக்கர் 78 சென்ட் நிலம் உள்ளது. இதில்ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 ஏக்கர் 51 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு முன்னிலையில் கடந்த 23ஆம் தேதி நிலங்களை மீட்டனர்.
அங்கு கட்டப்பட்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்த நிலையில் இன்று 46 குடும்பங்களைச் சேர்ந்த 110 வீடுகளுக்கும் சீல் வைக்க அதிகாரிகள் வந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொன்னேரி தச்சூர் சாலையில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை வீசி எரிந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வட்டாட்சியர் ரஜினிகாந்த் மற்றும் காவல்துறையினர் சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.