கனமழையால் வெள்ளத்தில் மிதந்த வீடுகள்.. புகார் அளித்தும் யாரும் வராததால் தூய்மை பணியாளராக மாறிய மக்கள்!
கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் முக்கிய நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்துவங்கி உள்ளது.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர், ஆலந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு தொடர் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் ஆலந்துறை அடுத்த செம்மேடு கிராமத்தில் உள்ள திரு.வி.க நகர் குடியிருப்புக்குள் மழை நீர் சூழ்ந்தது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு நீர் தேங்கியது.
இதன் காரணமாக வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் வெளியே வர முடியாமலும், வெளியே சென்றவர்கள் குடியிருப்புக்குள் வர முடியாமலும் தவித்தனர்.
மேலும் படிக்க: ஊட்டி போற பிளான் இருக்கா? அப்போ ரயில் பயணத்தை மறந்திருங்க : சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!
இந்நிலையில் ஒரு சில வீடுகளில் மழை புகுந்தது. மேலும் அதிகாலையில் இருந்து அப்பகுதியில் மக்களே தூய்மை செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் ஆலாந்துறை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.