Categories: தமிழகம்

அவன் எப்படி சொகுசா வாழலாம்? பிரிந்து சென்ற கணவனை பழி வாங்க மனைவி போட்ட ஸ்கெட்ச்!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் எழில்மாறன். சித்தரேவு ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார்

இந்நிலையில் எழில் மாறன் தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதனை அடுத்து எழில் மாறன் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பைக் கொள்ளை சம்பவத்தின் பின்னணியில்
எழில் மாறனை பிரிந்து வாழும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆள் வைத்து கணவனின் பைக்கை திருட வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தன்னைப் பிரிந்து சென்ற கணவன் விலை உயர்ந்த புது பைக்கை வாங்கிக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுவதை பொறுத்துக் கொள்ளாத மனைவி ஜெயலட்சுமி தனது உறவினர்கள் உதவியுடன் கணவனின் மோட்டார் சைக்கிளை திருடுவதற்கு திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதனை அடுத்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எழில் மாறனின் மோட்டார் பைக்கை கைப்பற்றிய போலீசார் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய பால யோகி, பிரகாஷ், காயத்ரி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர் தலைமறைவான எழில் மாறனின் மனைவி ஜெயலட்சுமியை தேடி வருகின்றனர்.

கணவனின் மோட்டார் சைக்கிளை மனைவியே திருடுவதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.