Categories: தமிழகம்

பிரதமர் மோடி எப்படி அப்படி சொல்லலாம்? இது தற்கொலைக்கு சமம் : அமைச்சர் துரைமுருகன் வேதனை!

வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது இதில் ஊராட்சி தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

இதன் பின்னர் காட்பாடி அடுத்த கரசமங்கலம் என்ற இடத்தில் ரயில்வே கேட்டில் கடவு பாதையில் மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.29.14 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி துவங்கினார் இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன்,துணை மேயர் சுனில் உள்ளிட்ட திரளான அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்

பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில். தமிழகம் கர்நாடகாவும் மேகதாது அணை விவகாரத்தில் பேசி தீர்வு காணவில்லை 38 முறை பேசியும் சுமூக தீர்வில்லை நடுவர் மன்றம் சென்றோம் நேரடியாக பட்டேலும் , கலைஞரும்,தேவகவுடாவும் பேசியும் அப்போதே நடக்கவில்லை பேச்சால் இதற்கு தீர்வில்லை என நாங்கள் அறிவித்த பின்னர் அப்போது வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைத்தார்

நாங்கள் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம் மறுபடியும் சென்று பேசினால் என்ன ஆகும் என கேட்டால் எல்லா வழக்கிலும் ஒன்றை கர்நாடகா கூறுவார்கள் பேசி தீர்க்கிறோம் என அது பிரச்சணைக்கு தீர்வாகாது தென் பென்னை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள் அதற்கும் நாம் நடுவர் மன்றம் கேட்டோம் ஆனால் அவர்கள் இரண்டாண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துகொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம்

கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது தான் இதுகுறித்து முதல்வர் விரைவில் முடிவு எடுப்பார்

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது நாங்கள் செல்லும் என கூறியதை தன் அறிவித்தோம்.வன்னியர்கள் உள் இட ஒதுக்கீடு குறித்து கேட்டதற்கு அதற்கென்ன செய்வது என கூறினார்

நீர்வளத்துறை கால்வாய்களை எல்லா இடங்களிலும் சீராக்கி ஒவ்வொரு ஏரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் செய்யப்பட்டுள்ளது

வயநாடு விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொன்னார் என்பது பினராயி விஜயன் படிக்கிறார் வரலாம் வெள்ளம் என சொல்லியுள்ளனர் அதில் பிரளயம் ஏற்படும் என கூறவில்லை இதில் பினராயி விஜயன் சொல்வது தான் உண்மை என கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

4 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

5 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

6 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

7 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

10 hours ago

This website uses cookies.