கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்த அக்டோபர் 23 ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். அவரது வீட்டில் நடந்த சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதின், கோவை ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கைதானவர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்ற காவலில் விசாரணை நடத்த பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முகமது தவுபிக்(25) , உமர் பரூக் (39) மற்றும் பெரோஸ் கான்(28) ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.