Categories: தமிழகம்

எவ்ளோ அக்கறை அண்ணாமலைக்கு… மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் : அமைச்சர் பொன்முடி விமர்சனம்!!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டிலான நோயாளிகள் காத்திருப்பு கூட மற்றும் கழிப்பறை கட்டிடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார்.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டலான நோயாளிகள் காத்திருப்பு கூடம் மற்றும் கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாட வேண்டும் என தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். கர்நாடக தாய்மொழி மீது நமக்கு வெறுப்பு இல்லை. ஆனால் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்துகின்ற கூட்டம் அங்கே தமிழ் தாய் வாழ்த்து பாடி உள்ளனர்.

அதை அண்ணாமலையும் வரவேற்று இருக்க வேண்டும் அங்கே இருக்கிற பிஜேபி தலைவர் வரவேற்று இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிக்கொண்டிருக்கும் பொழுது நடுவில் எழுந்து செல்வது ஒரு தவறான செயல் முன்னாள் அமைச்சராக இருந்தவர் அதனை செய்திருக்கிறார்.

இதை கண்டனத்துக்குரியது தமிழ் பற்று உள்ள தலைவர்கள் அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் பார்த்துக் கொள்வது தமிழ் தமிழுக்காக என சொல்லிக் கொண்டிருக்கிற அண்ணாமலை பிஜேபி அண்ணாமலைக்கு தமிழ் மொழி மீது எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது மைக்கில் கோளாறு வந்ததை சரிசெய்ய சென்றதாக அவர் கூறியுள்ளார். இதனை எல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தார்கள். இது மக்களுக்கு புரியும் என விழுப்புரத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

21 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

23 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

23 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

24 hours ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.