மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய மின் கட்டணம் உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு , நூல் விலை பிரச்சனைகள் காரணமாக விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வரக்கூடிய சூழ்நிலையில் தமிழக அரசு 32 சதவீத மின் கட்டணம் உயர்வு அறிவித்துள்ளது.
இதனால் மீண்டும் விசைத்தறி தொழில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உடனடியாக தமிழக அரசு விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.