தமிழகம்

கடலில் தவித்த கடலூர் மீனவர்கள்.. கதறிய உறவினர்கள்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டது எப்படி?

கடலூரில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சூறாவளிக் காற்றால் கடலின் நடுவே தவித்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.

கடலூர்: நேற்று கடலூர் மாவட்டத்தின் கடல் பகுதியில் ஏற்கனவே மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். இவ்வாறு வந்து கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி படகுகள் இரண்டு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து உள்ளது. இதில், தைகால் தோணித்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர், 2 படகுகளில் கரை திரும்பும்போது கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளனர். இதானல் இரண்டு படகுகளும் கவிழ்ந்து உள்ளது.

இதனால் படகில் இருந்த 6 மீனவர்களும் கடலில் தத்தளித்துள்ளனர். அதேநேரம், இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிக்கொண்டனர். பின்னர், கடலில் சிக்கிக்கொண்ட தகவலை உறவினர்களுக்கு பகிர்ந்தவர்கள், உடனடியாக தங்களை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து, நேற்று இரவு முதல் மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்றன. அப்போது, அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிக்கு படகுகளை பயன்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. எனவே, ஹெலிகாப்டர் உதவி நாடப்பட்டது. இதன்படி, இன்று பிற்பகல் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர், மீனவர்கள் சிக்கியுள்ள பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக 2 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தொடர்ந்து பெண்களுக்கு வலை விரித்த காவலர்.. மனைவியும் புகார்.. சென்னையில் நடந்தது என்ன?

மீதமுள்ள 4 மீனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று அவர்களும் தற்போது மீட்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, அவர்கள் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் பாதுகாப்பாக இருக்கும் காட்சிகள் வெளியாகியது. மேலும், வங்கக் கடலில் ஏற்படும் புயல் காரணமாக கரையோர மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

32 minutes ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

47 minutes ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

1 hour ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

3 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

3 hours ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

4 hours ago