தமிழகம்

கடலில் தவித்த கடலூர் மீனவர்கள்.. கதறிய உறவினர்கள்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டது எப்படி?

கடலூரில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சூறாவளிக் காற்றால் கடலின் நடுவே தவித்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.

கடலூர்: நேற்று கடலூர் மாவட்டத்தின் கடல் பகுதியில் ஏற்கனவே மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். இவ்வாறு வந்து கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி படகுகள் இரண்டு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து உள்ளது. இதில், தைகால் தோணித்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர், 2 படகுகளில் கரை திரும்பும்போது கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளனர். இதானல் இரண்டு படகுகளும் கவிழ்ந்து உள்ளது.

இதனால் படகில் இருந்த 6 மீனவர்களும் கடலில் தத்தளித்துள்ளனர். அதேநேரம், இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிக்கொண்டனர். பின்னர், கடலில் சிக்கிக்கொண்ட தகவலை உறவினர்களுக்கு பகிர்ந்தவர்கள், உடனடியாக தங்களை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து, நேற்று இரவு முதல் மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்றன. அப்போது, அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிக்கு படகுகளை பயன்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. எனவே, ஹெலிகாப்டர் உதவி நாடப்பட்டது. இதன்படி, இன்று பிற்பகல் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர், மீனவர்கள் சிக்கியுள்ள பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக 2 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தொடர்ந்து பெண்களுக்கு வலை விரித்த காவலர்.. மனைவியும் புகார்.. சென்னையில் நடந்தது என்ன?

மீதமுள்ள 4 மீனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று அவர்களும் தற்போது மீட்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, அவர்கள் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் பாதுகாப்பாக இருக்கும் காட்சிகள் வெளியாகியது. மேலும், வங்கக் கடலில் ஏற்படும் புயல் காரணமாக கரையோர மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

8 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

8 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

9 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

10 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

11 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

13 hours ago

This website uses cookies.