தமிழகம்

சம்பள பாக்கி வைத்த நிறுவனம்.. பெண் தூய்மைப் பணியாளர் விபரீத முடிவு!

சென்னையில், வேலை செய்ததற்கான சம்பள பாக்கி தராமல் இழுத்தடித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக HR மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: சென்னையின் வியாசர்​பாடியைச் சேர்ந்​தவர் சுமதி(37). இவர் தூய்மைப் பணியாளர் ஆவார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் தி.நகர் பிர​காசம் தெரு​வில் உள்ள தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் பணி​யமர்த்​தப்​பட்​டார். ஆனால், பணியில் சேர்ந்த சில நாட்​களி​லேயே பெண் பணி​யாளர் வேண்​டாம், ஆண் பணி​யாளர்​தான் வேண்டும் என நிர்​வாகம் முடி​வெடுத்​துள்ளது.

எனவே​, சுமதி பணியி​லிருந்து நிறுத்​தப்​பட்​டுள்ளார். ஆனால், அவர் பணி செய்த நாட்களுக்​கான சம்​பளம் கொடுக்​கப்​ப​டா​மல் தொடர்ந்து இழுத்​தடிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பலமுறை கேட்​டும் சும​திக்​கான நிலுவைச் சம்பளம் கொடுக்​கப்​பட​வில்​லை. இதனால் விரக்தி அடைந்த அவர், கடந்த மார்ச் 4ஆம் தேதி மாலை, சம்​பந்​தப்​பட்ட அலுவலக நுழை​வாயி​லில் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​துக் கொண்​டுள்ளார்.

இதனால் உடல் முழு​வதும் பலத்த தீக் காயத்​துடன் கீழ்பாக்​கம் அரசு மருத்துவமனையில் சுமதி அனு​ம​திக்​கப்​பட்டுள்ளார். பின்னர், மார்ச் 13ஆம் தேதி உயிரிழந்​துள்ளார். இதனையடுத்து, இந்த விவ​காரம் தொடர்​பாக தேனாம்​பேட்டை போலீ​சார் விசா​ரித்து வந்​தனர்.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. 3 பேரை சுற்றி வளைத்த போலீஸ்..!!

இந்த ​நிலை​யில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனி​யார் நிறுவன மனிதவள மேலாண்மை மேலா​ள​ரான பழைய பெருங்​களத்​தூரைச் சேர்ந்த பிரீத்தி (40) என்​பவர் கைது செய்​யப்​பட்​டுள்ளார். முன்னதாக டெல்லி சென்​றிருந்த அவரை அங்கு சென்று போலீ​சார் கைது செய்​தனர்.

Hariharasudhan R

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

2 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

3 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

3 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

3 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

4 hours ago

This website uses cookies.