நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிகாட்டுப் பகுதியில் மனிதனின் எலும்பு கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கிடந்த மனிதனின் தலை, இடுப்பு எலும்பு, கால் உள்ளிட்ட மனிதனின் எலும்புகள் மற்றும் ஒரு ஜோடி காலணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் நாசரேத் போலீசார் பார்வையிட்டு எலும்புகளை கைப்பற்றி கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு யாருடையது ? கொலை செய்யப்பட்டு ஏதும் புதைக்கப்பட்டுள்ளதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும், நாசரேத் பகுதிகளில் கடந்த ஒரு வருடத்தில் காணாமல் போணதாக பதியப்பட்ட வழக்குகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.