விருதாசலத்தில் சொத்து பிரச்சனை முன் விரோதம் காரணமாக வீட்டின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு (மலம்) கலந்ததாக போலீசில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருதாசலம் குட்டக்கார தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கும் இவரது அண்ணன் மனைவி மகாலட்சுமிக்கும் கடந்த ஒரு வருடமாக சொத்து பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில், வெங்கடேஷ் வீட்டில் குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசியதன் காரணமாக, சந்தேகத்தின் பெயரில் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் டேங்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது, வெள்ளை நிற பனியன் துணியில் மனித கழிவை (மலம்) துணியில் சுருட்டி உள்ளே போடப்பட்டது தெரிய வந்தது.
இதன் காரணமாக வெங்கடேஷ் அவரது அண்ணன் மனைவி மகாலட்சுமி இதனை செய்திருக்கலாம் என விருதாசலம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை தேடி வருகின்றனர்.
அண்ணன், தம்பி சொத்துப் பிரச்சனையில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.