Categories: தமிழகம்

மரித்து போன மனிதநேயம்… உரிய நேரத்தில் உதவி கிடைக்காததால் பறிபோன உயிர் : கோவையில் நடந்த கொடூரம்!!

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லேட்டஸ் அப்பார்ட்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.

முரளி என்ற பெயிண்டர், அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 50), சாய்பாபா காலனி ஹரிதாஸ் ஆகிய இருவரை இன்று வேலைக்கு அழைத்துக்கொண்டு வந்து உள்ளார்.

9.30 மணியளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்கத் துவங்கி உள்ளனர். சாரத்தில் சந்திரன் தொங்கியபடி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் தலைகீழாக விழுந்து உள்ளார்.

நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரின்,தலையின் பின்பகுதி சுவற்றில் மோதியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் , கவலைக்கிடமாக இருந்துள்ளார்.

உடன் வேலை செய்தவர்கள் அதிர்ச்சியாகி, பயத்தில் நடுங்கியபடி நின்று உள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரனை ஒரு மணி நேரம் ஆகியும், குடியிருப்பு வாசிகளும் கண்டுகொள்ளாமல் விட்டதாக கூறப்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க வில்லை.

நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உள்ளனர். 108 ஆம்புலென்ஸில் வந்தவர்கள் சந்திரனை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்,டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார், உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தீவிர‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழே விழுந்து அடிபட்ட சந்திரனை உடன் பணி புரிந்தவர்களும், அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகளும் உடனே மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்ற வாய்ப்பு இருந்திருக்கும்.

கீழே விழுந்தவரை ஒரு மணி நேரம் வரை கண்டுகொள்ளாமல் விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உபசரிப்பிற்கு பெயர் பெற்ற கோவையில், நடைபெற்ற இச்சம்பவம் மனிதம் மரித்துப்போனதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

2 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

2 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

4 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

4 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

4 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

4 hours ago

This website uses cookies.