கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லேட்டஸ் அப்பார்ட்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.
முரளி என்ற பெயிண்டர், அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 50), சாய்பாபா காலனி ஹரிதாஸ் ஆகிய இருவரை இன்று வேலைக்கு அழைத்துக்கொண்டு வந்து உள்ளார்.
9.30 மணியளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்கத் துவங்கி உள்ளனர். சாரத்தில் சந்திரன் தொங்கியபடி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் தலைகீழாக விழுந்து உள்ளார்.
நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரின்,தலையின் பின்பகுதி சுவற்றில் மோதியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் , கவலைக்கிடமாக இருந்துள்ளார்.
உடன் வேலை செய்தவர்கள் அதிர்ச்சியாகி, பயத்தில் நடுங்கியபடி நின்று உள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரனை ஒரு மணி நேரம் ஆகியும், குடியிருப்பு வாசிகளும் கண்டுகொள்ளாமல் விட்டதாக கூறப்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க வில்லை.
நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உள்ளனர். 108 ஆம்புலென்ஸில் வந்தவர்கள் சந்திரனை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்,டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார், உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழே விழுந்து அடிபட்ட சந்திரனை உடன் பணி புரிந்தவர்களும், அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகளும் உடனே மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்ற வாய்ப்பு இருந்திருக்கும்.
கீழே விழுந்தவரை ஒரு மணி நேரம் வரை கண்டுகொள்ளாமல் விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உபசரிப்பிற்கு பெயர் பெற்ற கோவையில், நடைபெற்ற இச்சம்பவம் மனிதம் மரித்துப்போனதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.