தமிழகம்

தாயின் மார்பில் எட்டி உதைத்த மகன்கள்.. 3 மணி நேர தாக்குதல்.. சேலத்தில் நடந்தது என்ன?

சேலத்தில், தாயின் மீது எழுந்த சந்தேகத்தால், அவரைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கணவர், மகன்கள் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மேட்டூடையார்பாளையம் புதிய காலனியைச் சேர்ந்தவர்கள் பொன்னுவேல் (45) வசந்தி (38) தம்பதி. இவர்களுக்கு கவின் (20) மற்றும் 17 வயதில் என இரு மகன்கள் உள்ளனர். பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை செய்து வருகின்றனர்.

மேலும், 17 வயதான மகன், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் நடனமாடும் வேலை செய்து வருகிறார். தாய் வசந்தி, கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், வசந்தி கடந்த நான்கு மாதங்களாக செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இளைய மகன் தாயின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நம்பர் பிஸி என வந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அவர், வீட்டிற்கு வந்து தாயின் செல்போனை எடுத்து, யாரிடம் பேசுகிறார் எனக் கண்டுபிடிக்கும் வகையில், அதில் பதிவாகியிருந்த செல்போன் எண்ணை ஒரு செயலி மூலமாக யார் என்பதை தெரிந்து கொண்டுள்ளார்.

அதில், அந்த குறிப்பிட்ட எண்ணில் ராஜா என்ற பெயர் வந்துள்ளது. எனவே, அந்த ராஜா யார்? எனக் கேட்டு தந்தை மற்றும் மகன்கள் என மூவரும், வசந்தியிடம் கேட்டுள்ளனர். பினனர், நேற்று முன்தினம் காலையில் பொன்னுவேல், மனைவியை ஆபாசமாகத் திட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால், மூத்த மகன் கவின் மீண்டும் யார் அந்த ராஜா எனக் கேட்டு தாய் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், இளைய மகனும் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, அவரும் தாயை கடுமையாகத் தாக்கியுள்ளார். ஆனால் வசந்தி, யார் அந்த ராஜா என்பதை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், தாயின் மார்பில் மகன்கள் எட்டி உதைத்துள்ளனர். மேலும், அவரது தலைமுடியைப் பிடித்து சுவரில் மோதி தாக்கியுள்ளனர். இவ்வாறு சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விட்டுவிட்டு தாக்குதல் நடத்தியதில், வசந்தி மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், வசந்தியின் தங்கை சுகந்தியை செல்போனில் அழைத்து, அம்மாவை அடித்துவிட்டோம், அவர் மயங்கி விழுந்துவிட்டார், உடனடியாக புறப்பட்டு வா என அழைத்துள்ளனர். இதன்பேரில், கணவர் ராமச்சந்திரனுடன் சுகந்தி வந்துள்ளார். பின்னர், அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: டி இமான் என்னை ஏமாத்திட்டாரு… வைக்கம் விஜயலட்சுமி வைத்த பகீர் குற்றச்சாட்டு!

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வசந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர், இதுகுறித்த தகவல் கிடைத்த ஏத்தாப்பூர் போலீசார், வசந்தியின் கணவர் மற்றும் இரு மகன்களைக் கைது செய்தனர். மேலும், வசந்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நேற்று பிரேதப் பரிசோதனை நடத்தியதில், மகன்கள் தாக்கியதில் இதயம் முழுவதும் ரத்தம் கசிந்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, வசந்தியின் உடல் சுகந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Hariharasudhan R

Recent Posts

மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!

பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…

24 minutes ago

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

1 hour ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

2 hours ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

2 hours ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

3 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

4 hours ago

This website uses cookies.