தமிழகம்

முறுக்கு சுட்ட மனைவி.. தீ வைத்த கணவர்.. தவிக்கும் குழந்தைகளின் பரிதாபம்!

ராணிப்பேட்டையில் குடும்பத் தகராறில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவரும் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர்கள் பாலாஜி – சித்ரா தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பாலாஜியின் நடத்தையில் சித்ராக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பாலாஜியிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் சித்ரா, ராணிப்பேட்டை மாவட்டம், அய்யம்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் 2 குழந்தைகள் உடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (நவ.17) சித்ரா, தனது குழந்தைகளுக்காக வீட்டில் முறுக்கு சுட்டுக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது திடீரென பாலாஜி அங்கு வந்து உள்ளார்.

அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த பாலாஜி, தான் கொண்டு வந்த பெட்ரோலை சித்ரா மீது ஊற்றி உள்ளார். இதனால் அங்கு இருந்து தப்பிக்க சித்ரா முயற்சி செய்து உள்ளார். இருப்பினும், அவரால் முடியவில்லை.

பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் சித்ரா மீது நெருப்பை பற்ற வைத்து உள்ளார் பாலாஜி. அப்போது பாலாஜியை சித்ரா கட்டிப் பிடித்து உள்ளார். இதில் பாலாஜி மீதும் நெருப்பு பற்றி உள்ளது. இதில் அலறித் துடித்த சித்ரா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு அச்சாரம் போடுகிறதா விசிக? ஸ்டாலின் போட்ட முடிச்சு!

அதேநேரம், இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், 60 சதவீத காயங்கள் உடன் இருந்த பாலாஜியை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Hariharasudhan R

Recent Posts

போலீஸ் அனுப்பிய ‘அந்த’ வீடியோ.. சாலை மறியலில் மக்கள்.. 2 முறை காவலர் கைதானது ஏன்?

சென்னையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை: சென்னை மாநகரின் கோயம்பேடு…

20 minutes ago

கத்தி முனையில் இளம்பெண் கற்பழிப்பு… வீடியோ எடுத்து மிரட்டல் : நண்பனுக்கும் விருந்தளித்த கொடூரம்!

கத்தி முடினையில் இளம்பெண்ணை கற்பழித்த போதை ஆசாமி வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

23 minutes ago

டிவியில் அதிக ஒலி எழுப்பியதால் விபரீதம்.. கோவை சுந்தராபுரத்தில் இளைஞர் படுகொலை!

கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை…

49 minutes ago

கொண்டையை மறைந்த இரானி கொள்ளையர்கள்.. விமானத்துக்குள்ளே சென்று கைது.. செயின் பறிப்பு அரெஸ்ட் பின்னணி!

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.…

1 hour ago

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா விலகல்? பதறிய குஷ்பு!

மூக்குத்தி அம்மன் முதல் பாகம் 2020ல் வெளியானது. நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆர்ஜே…

2 hours ago

This website uses cookies.