தமிழகம்

4 வருஷமா எங்களுக்குள்ள ஒன்னுமில்ல.. சந்தையில் புடவையில் கணவர்.. அதிர்ந்த மனைவி

மத்திய பிரதேசத்தில் தனது கணவர் ஒரு ஆண் இல்லை என அவரது மனைவி போலீசில் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த 2020ஆம் ஆண்டு நவீன் என்பவர் உடன் திருமணம் நடைபெற்று உள்ளது. இவ்வாறு இவர்களுக்கு திருமணம் ஆன நாளில் இருந்து நவீன் தனது மனைவியிடம் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருந்து உள்ளார். குறிப்பாக, உடலுறவு வைத்து கொள்வதை முற்றிலுமாக தவிர்த்துக் கொண்டே வந்து உள்ளார்.

எனவே, இதனை சில நாட்கள் கழித்து, அந்தப் பெண் நவீனிடம் கேட்டு உள்ளார். அதற்கு, தனக்கு உடல் நலப் பிரச்னை என்றும், அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதால் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி இப்படி இருப்பதாகக் கூறி உள்ளார். இந்த நிலையில் தான் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து உள்ளது.

அதன்படி, சமீபத்தில் அந்தப் பெண் சந்தை ஒன்றிற்குச் சென்று உள்ளார். அங்கு தனது கணவரான நவீன், சேலை அணிந்து கொண்டு, கையில் வளையல் அணிந்தபடி பெண் வேடத்தில் பிச்சை எடுப்பதைப் பார்த்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

அந்தப் புகாரில், “என்னை ஏமாற்றி நவீன் என்பவர் திருமணம் செய்து கொண்டார். அவர் ஆண் இல்லை. அவர் மூன்றாம் பாலினமாக மாறி உள்ளார். எங்களது திருமணத்திற்கு பல லட்சம் ரூபாய் வரதட்சனையை தனது பெற்றோரிடம் வாங்கி உள்ளனர். ஆனால், தன் பாலினத்தை மாற்றி என்னை 4 வருடங்களாக நவீன் ஏமாற்றி வந்துள்ளார். இந்த 4 ஆண்டுகளில் எனக்கு உணவு கொடுக்காமல் குடும்பத்துடன் அடித்து, மேலும் வரதட்சனை கேட்டு துன்புறுத்தினர்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: உன்கிட்ட சொத்து இல்ல.. அப்போ இதச் செய்.. பாலியல் இச்சைக்கு அனுப்புவதாக மருமகள் புகார்

இது குறித்து விசாரித்தபோது, தனது தொழிலுக்காக பெண்கள் போல் வேடமிட்டதாக நவீன் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும், தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

11 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

12 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

13 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

13 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

14 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

14 hours ago

This website uses cookies.