தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டுமென்றால், ஒவ்வொரு முறைக்கும் 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மனைவி கண்டிஷன் போட்டதாக கணவர் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்ரி வருகிறார். இவருக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு பிந்துஸ்ரீ என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணமான நாளில் இருந்து தம்பதி ஒற்றுமையாக இல்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என பிந்துஸ்ரீ உறுதியாக கூறியதாகவும், தனது அனுமதியின்றி கணவர் தொடக்கூடாது என்றும், மீறி தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ஒரு கட்டத்தில், கணவருடன் வாழாமல் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் பிந்துஸ்ரீ.
இந்த நிலையில், ஸ்ரீகாந்த் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “திருமணம் ஆனதில் இருந்து தாம்பத்திய உறவு நடக்கவில்லை. குழந்தை பெற்றால் தனது அழகு கெட்டுப்போய் விடும் என்பதால் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என எனது மனைவி கூறிவிட்டார்.
என்னை மீறித் தொட்டால் உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன். என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என்றால், ஒவ்வொரு முறைக்கும் 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். விவாகரத்து வழங்க வேண்டுமென்றால் 45 லட்சம் ரூபாய் கேட்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு பதில் சொல்வாரா விஜய்? இன்னும் 8 நாட்கள் தான்.. தவெகவினர் தீவிரம்!
இதனையடுத்து, இந்த மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், பிந்துஸ்ரீயிடம் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, கணவர் ஸ்ரீகாந்த் தன்னிடம் வரதட்சணை கேட்டு தன்னை மிரட்டுவதாக பிந்துஸ்ரீ புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.