தமிழகம்

சுத்தியால் மனைவி மீது கொடூர தாக்குதல்.. சாலையில் சடலமாக கிடந்த கணவர்.. கோவையில் பரபரப்பு!

கோவையில், குடும்பத் தகராறில் மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற கணவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த வினோபா நகரில் வசித்து வந்தவர்கள் தாஸ் – மம்தா தம்பதி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டத்தில் மிகவும் ஆத்திரம் அடைந்த தாஸ், பக்கத்து வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து வந்து, மனைவியின் தலையில் பலமாக தாக்கி உள்ளார்.

இதனையடுத்து, இதில் படுகாயம் இந்த மம்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து மம்தாவின் கணவர் தாஸ் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கொலை நடந்து 3 நாட்கள் ஆன நிலையில், கொலையாளி குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. எனவே, தனிப்படை அமைத்து போலீசார் தாஸைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை பாலாஜி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு சடலமாக கிடந்தது, மனைவியைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவர் தாஸ் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ’ஏன் அவர் மீது வழக்கு பதியவில்லை?’.. போலீஸ் ஆவணங்களை கிழித்தெறிந்தாரா பாமக நிர்வாகி? கோவையில் பரபரப்பு!

பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் போலீசார் தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தால் தாஸ் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இது குறித்த முழுத் தகவலும் பிரேதப் பரிசோதனை முடிவிலே தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!

வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…

6 hours ago

நான் சொல்றத செஞ்சு காட்டுங்க..இந்திய அணிக்கு சவால்..முன்னாள் பாகிஸ்.வீரர் சர்ச்சை பேச்சு.!

இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…

7 hours ago

அடேங்கப்பா…’குட் பேட் அக்லி’ டீசரில் அஜித் போட்டிருந்த சட்டை இவ்ளோ காஸ்ட்லீயா.!

அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…

8 hours ago

குடிகாரனுக்கு ஏன் பொண்ணு கேட்குதா…தூது விட்ட நபரை துரத்தி அடித்த பிரபல நடிகையின் அம்மா.!

அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…

9 hours ago

WHAT BRO..விஜய் மகன்னு எதுக்கு சொல்லுறீங்க..செய்தியார்களிடம் கடுப்பான நடிகர்.!

கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…

10 hours ago

Ind Vs Nz :விறு விறுப்பான நாக் அவுட் போட்டி..முதலிடத்தை தட்டிப் பறிக்க போவது யார்.!

பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…

11 hours ago

This website uses cookies.