தமிழகம்

ஒரே நாளில் இரு பெண்களை மனைவியாக்கிய கணவர்.. தீராத சந்தேகத்தால் நடந்த விபரீதம்!

ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் ஆனெக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ராசமான ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பாபு (32) இவருக்கு அனிதா மற்றும் சுஷ்மிதா என 2 மனைவிகளும் 4 குழந்தைகளும் உள்ளனர்.

இதில் அனிதா மைசூர் அருகே உள்ள சிக்க மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர். அனிதா மற்றும் சுஷ்மிதாவை பாபு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில் தாலி கட்டி திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பாபுவிற்கு அனிதா மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகறாரு செய்து வந்துள்ளார். கணவன் மனைவி இடையே தகறாரு ஏற்படும் போது அனிதா உறவினர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம், அதுபோலவே தகராறு ஏற்பட்டு கடந்த மாதத்திற்கு முன்பு போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மனைவி பாபு வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் நேற்று பாபு அனிதாவுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது அவர் வீட்டில் இருந்த ராகி களி கிண்டும் கோலில் (தொண்ணை) அனிதாவை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்.

நேற்று மதியம் செய்த கொலை குறித்து யாருக்கும் தெரியாமல் மறைத்த அவர் பின்னர் அதிகாலையில் அருகில் உள்ள பொது மக்களிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அத்திப்பள்ளி போலீசாருக்கு பகுதியினர் தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிலிருந்து கிடந்த அனிதாவின் உடலை கைப்பற்றி அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பாபுவை கைது செய்த போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சமச்சிட்டேன் சாப்ட்ருங்க.. கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மனைவி விபரீத முடிவு.. கொடுமையின் உச்சம்!

வரதட்சணை மற்றும் மன ரீதியான உளைச்சல் கொடுத்ததால் கடிதம் மற்றும் மெசேஜ் அனுப்பிவிட்டு மனைவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார்…

4 minutes ago

காணாமல் போன ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு… கோவையை அலற விட்ட சம்பவம்!

கோவை மதுக்கரை நாச்சிபாளையம் அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மதுக்கரை போலீசார் விசாரித்த நிலையில், அந்த பெண்ணின்…

14 minutes ago

அப்பா இறந்தப்போ சிரிச்சாங்க…மனம் உடைந்து பேசிய பிரித்விராஜ்.!

பிரபலங்களின் மறைவு - ரசிகர்களின் அணுகுமுறை இயக்குநரும் நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'L2 - எம்புரான்' திரைப்படம்…

1 hour ago

ஆடு என விமர்சித்த மீனா.. யாரை தெரியுமா? போட்டுடைத்த பத்திரிகையாளர்.!!

மீனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஏராளமான ஆடுகளுக்கு மத்தியில் ஒரு சிங்கம் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "சிங்கம் ஆடுகள் தன்னைப்…

1 hour ago

டிரெண்டிங் ஆன ‘அண்ணன பாத்தியா’ பாடல்..ரீல்ஸ் எடுத்து வைப் செய்யும் பிரபலங்கள்.!

வைரலாகும் "Culik Aku Dong" சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் வீடியோக்கள்,ரீல்ஸ்கள்,பாடல்கள் வைரலாகி வருகின்றன.அந்த வகையில் சமீப காலமாக எந்த…

2 hours ago

பிரியாணியில் பூச்சி.. 10 பிரியாணி, ஆம்லேட் கேட்ட ஐடி ஊழியர்கள்.. இறுதியில் ட்விஸ்ட்!

கோவையில், பிரியாணியில் பூச்சி இருப்பதாக 10 பிரியாணி கேட்டு கடை உரிமையாளரைத் தாக்கிய ஐடி ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.…

2 hours ago

This website uses cookies.