கணவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரதரவென இழுத்துச் சென்று கொன்ற மனைவியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அமரேந்திர பாபு. இவரது மனைவி அருணா. இந்த நிலையில், இவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து, மனைவியை அடித்து துன்புறுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அந்த வகையில், நேற்று முன்தினமும் அதேபோன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர், மனைவி அருணாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். மேலும், தனது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து, அருணாவைக் கொலை செய்வேன் எனவும் அவர் மிரட்டி உள்ளார். இதனால், பொறுமை இழந்த அருணா, ஆத்திரத்தில் ஒரு கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார்.
அதன் பிறகு, ஒரு கயிறை எடுத்து கணவரின் கழுத்தில் கட்டி உள்ளார். பின்னர், கணவரை வெளியே இழுத்துச் சென்று தரதரவென கொண்டு சென்றுள்ளார். இவ்வாறு கழுத்தில் கயிறு கட்டியதால் ஏற்பட்ட வலியால், அமரேந்திர பாபு துடித்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அருணாவை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.
இதையும் படிங்க: பேசிக் கொண்டிருந்த காதலனை விரட்டிவிட்டு காதலி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!
பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. எனவே, இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள்ளாக, அமரேந்திர பாபு உயிரிழந்துள்ளார். இதனை போலீசாரும் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், தற்போது, அருணா தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அருணாவைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.