தமிழகம்

மனைவியை காரோடு எரித்துக் கொன்ற கணவர்.. நடுரோட்டில் பயங்கரம்!

கேரளா, கொல்லத்தில் நடுரோட்டில் காரில் பெட்ரோல் ஊற்றி மனைவியைக் கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். 60 வயதான இவருக்கு அனிலா (44) என்ற மனைவி உள்ளார். இவர், பத்மராஜனின் 2வது மனைவி ஆவார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பத்மராஜன், கேட்டரிங் பணி செய்து வரும் நிலையில், மனைவியின் பேக்கரிக்கும் உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு இருந்து உள்ளது. இது ஒரு கட்டத்தில் உச்சம் தொடவே, கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு, மனைவி அனிலா தனது வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதன் பின்னர், மனைவியை பத்மராஜன் தேடி வந்து உள்ளார்.

இந்த நிலையில், நேற்று (டிச.04) இரவு 08.30 மணியளவில் கொல்லத்தில் உள்ள செம்மமுக்கு என்ற பகுதியில் காரில் அனிலாவும், மற்றொரு நபரும் சென்று உள்ளனர். இதனைப் பார்த்த பத்மராஜன், மற்றொரு ஆம்னி காரில் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று உள்ளார். பின்னர், செம்மமுக்கு என்ற பகுதியில் காரை வழிமறித்து நிறுத்தி உள்ளார்.

இதனையடுத்து, தான் கொண்டு வந்த பெட்ரோலை காரின் மீது ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளார். இதில் பலத்த தீக்காயங்கள் உடன் அனிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். அதேநேரம், அனிலா உடன் இருந்த நபர் படுகாயங்கள் உடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: மகளிர் பள்ளி கழிவறைக்குள் மாணவிகளுக்கு நடந்த கொடூரம் : தப்ப முயன்ற ஆசிரியருக்கு செருப்படி!

இதனிடையே, காருக்கு தீ வைத்து தனது மனைவியைக் கொன்ற பத்மராஜன், கொல்லம் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், பத்மராஜனைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக இவ்வாறு செய்ததாக கூறியுள்ள போலீசார், சிகிச்சை பெற்று வரும் நபருக்கு அனிலா உடன் என்ன தொடர்பு என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

13 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

14 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

14 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

15 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

15 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

16 hours ago

This website uses cookies.