தமிழகம்

பையோடு சென்ற கணவன்.. துரத்திய நாய்.. துண்டு துண்டான மனைவி.. குமரியில் பயங்கரம்!

குமரியில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கொன்று துண்டு துண்டாக்கிய கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு குடியேறி உள்ளார். இவர் ஆடு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி மரிய சந்தியா (30

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மனைவி மரிய சந்தியாவின் நடத்தையில் மாரிமுத்துக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இது ஒருகட்டத்தில் உச்சத்தில் இருக்க, அவரை கொலை செய்த மாரிமுத்து முடிவு செய்து உள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் மனைவியை வீட்டுக்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார்.

பின்னர், வீட்டிற்கு வந்த உடனே மாரிமுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். எனவே, சண்டையிடும் சத்தம் வெளியே கேட்ககூடாது என்பதற்காக டிவி சத்தத்தை அதிகமாக வைத்து உள்ளார். இந்த நிலையில் தான் மரியசந்தியாவை, மாரிமுத்து வெட்டிக் கொன்றுள்ளார். இவ்வாறு வெட்டும் போது வலி தாங்க முடியாமல் மரியசந்தியா அலறும் போது சத்தம் வெளியே கேட்காமல் இருக்கவே டிவி சத்தத்தை மாரிமுத்து அதிகரித்து உள்ளார்.

பின்னர் ஆட்டை அறுப்பது போல் மனைவி உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உள்ளார். இந்த சத்தம் எப்படியோ வெளியில் கேட்க, குடியிருப்பில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர், மாரிமுத்துவிடம் என்னவென்று கேட்டு உள்ளார். அப்போது, துணியைக் காய போட ஆணி அடிப்பதாக மாரிமுத்து கூறியுள்ளார்.

இதனையடுத்து, மரியசந்தியாவின் தலையை ஒரு பையிலும், மற்ற 2 உடல் பாகங்களை வேறு இரண்டு பைகளிலும் அடைத்து வைத்து உள்ளார். தொடர்ந்து, அந்தப் பைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து தரையில் வைத்து இழுத்துச் சென்றுள்ளார். அதில் ரத்த வாடை வந்ததால், மாரிமுத்துவை இழுக்கவிடமால் ஒரு நாய் விடாமல் குரைத்துள்ளது.

இதையும் படிங்க:

ஒரு கட்டத்தில் அந்த நாய், வாயால் பேக்கை கடித்து இழுத்திருக்கிறது. இந்த சத்தம், மாரிமுத்துவின் ஒரு பேக்கை நாய் கவ்வி இழுத்ததையும் பார்த்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள், சந்தேகம் அடைந்து மாரிமுத்துவிட்டம் அதில் என்ன இருக்கிறது என்று கேட்டு உள்ளனர்.

ஆனால், அவர்களிடம் மாரிமுத்து மாட்டிறிச்சை எனக் கூறியுள்ளார். ஆனால் மக்கள் அதனை நம்பவில்லை. எனவே, மாரிமுத்து இழுத்து வந்த பையை வலுக்கட்டாயமாக வாங்கி திறந்து பார்த்த போது, மரிய சந்தியாவின் உடல்களின் பாகங்கள் இருந்ததை பார்த்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாரிமுத்துவையும் பிடித்து வைத்தனர். பின்னர் போலீசார் வந்து 3 பைகளில் இருந்த மரிய சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!

வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டா வீடியோ நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல்…

3 hours ago

குட்டி ‘சைந்தவி’ என் கூடவே இருக்காங்க…பாச மழை பொழிந்த ஜி.வி.பிரகாஷ்.!

சைந்தவிக்கு எப்போதும் நல்ல மனசுங்க இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்,இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் 'கிங்ஸ்டன்'…

4 hours ago

நண்பர்களால் உயிரை விட்ட என் அப்பா..பிரபல நடிகரின் மகன் உருக்கம்.!

நடிகர் பாண்டியன் இறப்பின் கொடூர பின்னணி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர்…

5 hours ago

பிரபல இயக்குநர் வீட்டில் புகுந்த அமலாக்கத்துறை : சொத்துகள் முடக்க.. சென்னையில் பரபரப்பு!

சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ்…

5 hours ago

புது அவதாரத்தில் ‘டைட்டானிக்’ பட ஹீரோயின்…செம அப்டேட்டா இருக்கே.!

இயக்குனராகும் டைட்டானிக் பட ஹீரோயின் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில்…

6 hours ago

நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச் சடங்கு செய்யணும் : பிரபல நடிகை விருப்பம்!

நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…

6 hours ago

This website uses cookies.