தமிழகம்

பையோடு சென்ற கணவன்.. துரத்திய நாய்.. துண்டு துண்டான மனைவி.. குமரியில் பயங்கரம்!

குமரியில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கொன்று துண்டு துண்டாக்கிய கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு குடியேறி உள்ளார். இவர் ஆடு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி மரிய சந்தியா (30

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மனைவி மரிய சந்தியாவின் நடத்தையில் மாரிமுத்துக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இது ஒருகட்டத்தில் உச்சத்தில் இருக்க, அவரை கொலை செய்த மாரிமுத்து முடிவு செய்து உள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் மனைவியை வீட்டுக்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார்.

பின்னர், வீட்டிற்கு வந்த உடனே மாரிமுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். எனவே, சண்டையிடும் சத்தம் வெளியே கேட்ககூடாது என்பதற்காக டிவி சத்தத்தை அதிகமாக வைத்து உள்ளார். இந்த நிலையில் தான் மரியசந்தியாவை, மாரிமுத்து வெட்டிக் கொன்றுள்ளார். இவ்வாறு வெட்டும் போது வலி தாங்க முடியாமல் மரியசந்தியா அலறும் போது சத்தம் வெளியே கேட்காமல் இருக்கவே டிவி சத்தத்தை மாரிமுத்து அதிகரித்து உள்ளார்.

பின்னர் ஆட்டை அறுப்பது போல் மனைவி உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உள்ளார். இந்த சத்தம் எப்படியோ வெளியில் கேட்க, குடியிருப்பில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர், மாரிமுத்துவிடம் என்னவென்று கேட்டு உள்ளார். அப்போது, துணியைக் காய போட ஆணி அடிப்பதாக மாரிமுத்து கூறியுள்ளார்.

இதனையடுத்து, மரியசந்தியாவின் தலையை ஒரு பையிலும், மற்ற 2 உடல் பாகங்களை வேறு இரண்டு பைகளிலும் அடைத்து வைத்து உள்ளார். தொடர்ந்து, அந்தப் பைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து தரையில் வைத்து இழுத்துச் சென்றுள்ளார். அதில் ரத்த வாடை வந்ததால், மாரிமுத்துவை இழுக்கவிடமால் ஒரு நாய் விடாமல் குரைத்துள்ளது.

இதையும் படிங்க:

ஒரு கட்டத்தில் அந்த நாய், வாயால் பேக்கை கடித்து இழுத்திருக்கிறது. இந்த சத்தம், மாரிமுத்துவின் ஒரு பேக்கை நாய் கவ்வி இழுத்ததையும் பார்த்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள், சந்தேகம் அடைந்து மாரிமுத்துவிட்டம் அதில் என்ன இருக்கிறது என்று கேட்டு உள்ளனர்.

ஆனால், அவர்களிடம் மாரிமுத்து மாட்டிறிச்சை எனக் கூறியுள்ளார். ஆனால் மக்கள் அதனை நம்பவில்லை. எனவே, மாரிமுத்து இழுத்து வந்த பையை வலுக்கட்டாயமாக வாங்கி திறந்து பார்த்த போது, மரிய சந்தியாவின் உடல்களின் பாகங்கள் இருந்ததை பார்த்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாரிமுத்துவையும் பிடித்து வைத்தனர். பின்னர் போலீசார் வந்து 3 பைகளில் இருந்த மரிய சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை; உறுதியேற்ற தவெக தலைவர் விஜய்…

தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…

6 minutes ago

பெரிய கட்சியில் என்னை போட்டியிட அழைக்கிறார்கள்… விஜய்க்கு எதிராக நிற்பேன் : பவர் ஸ்டார் மீண்டும் பேச்சு!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…

10 minutes ago

Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…

டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…

2 days ago

முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்

சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…

2 days ago

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி பதவிகளை பறிக்க வேண்டும் : திடீரென வந்த எதிர்ப்பு குரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…

2 days ago

‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…

2 days ago

This website uses cookies.