கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள வாகராயம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் விசைத்தறிப்பு தொழிலாளி இளங்கோவன் சம்பவத்தன்று தனது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கில் இளங்கோவனின் வீட்டு உரிமையாளர், அமிர்தராஜ் மற்றும் அவரது காதலி கலைவாணி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அமிர்தராஜ் வாகரயாம்பாளையம் பகுதியில் தனது மனைவி விஜயலட்சுமிவுடன் வசித்து வந்த நிலையில், அமிர்தராஜுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவருடன் தொடர்பு இருந்தது தெரியவர, விஜயலட்சுமி அமிர்தராஜை கண்டித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அமிர்தராஜ், தனது மனைவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு, தன் வீட்டில் குடியிருந்த இளங்கோவனை அணுகியுள்ளார்.
இதையும் படியுங்க: கோவிலில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை… பூசாரியின் கோரமுகம் : கோவையில் பகீர்!
கடந்த 2019 ஆம் ஆண்டு இளங்கோவன் மூலம் ஓட்டுநர் ஒருவரை ஏற்பாடு செய்து லாரியை மீது ஏற்றி மனைவியை தீர்த்துக்கட்டிய அமிர்தராஜ், போலீசில் லாரி மோதியதில் விஜயலட்சுமி இறந்து விட்டதாக புகார் அளித்ததுடன், மனைவி பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டு தொகை 15 லட்சத்தையும் பெற்றுள்ளார்.
பின்னர் காதலி கலைவாணியுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமிர்தராஜ் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாடகை எதுவும் கொடுக்காமல் பல ஆண்டுகளாக அமிர்தராஜின் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் இளங்கோவன்.
ஒரு கட்டத்தில் இளங்கோவனை வீட்டை காலி செய்யுமாறு அமிர்தராஜ் கூற, மனைவியை லாரியை ஏற்றி கொலை செய்தது குறித்து போலீஸிடம் தெரிவித்து விடுவேன் என இளங்கோவன் மிரட்டியுள்ளார்.
இளங்கோவன் விஜயலட்சுமியின் கொலை பற்றி வெளியில் சொல்லிவிடுவாரோ என பயந்த அமிர்தராஜ், தன் காதலி கலைவாணியுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து இளங்கோவனை கொன்றுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, அமிர்தராஜ், கலைவாணி மற்றும் சிறுவன் உள்ளிட்ட மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.