தமிழகம்

2 attempt தோல்வி.. 3வது முயற்சியில் காதல் கணவனைக் கொன்ற மனைவி!

காஞ்சிபுரத்தில் காதல் கணவனை கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், புதுநல்லூரைச் சேர்ந்தவர் ரவி. இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறது. இவர் 20 வருடங்களுக்கு முன்பு ஜெயந்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்து உள்ளார். இந்த தம்பதிக்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

ரவி, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஜெயந்தி உடன் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்புகள் இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில், ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த ஜெயந்தி, சமையல் எண்ணெய்யைக் கொதிக்க வைத்து, தூங்கிக் கொண்டு இருந்த ரவி மீது ஊற்றி உள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரவி, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இதனையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், ஜெயந்தியை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆத்திரம் தாங்காமல் இதுவரை இரண்டு முறை கணவர் ரவியைக் கொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்து உள்ளது. இதன்படி, ஒருமுறை சாப்பாட்டில் விஷம் வைத்தும், மற்றொரு முறை பீரோவை தள்ளிவிட்டும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதையும் படிங்க: 120 கி.மீ வேகம்.. மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் பலி.. OMR-ல் எதிர்பாரா சம்பவம்!

ஆனால், இந்த இரண்டு கொலை முயற்சியிலும் தப்பிய ரவி, இறுதியாக கொதிக்கும் சமையல் எண்ணெய் ஊற்றியதில் துடிதுடித்து, சிகிச்சையில் இருந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்து உள்ளது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஜெயந்தியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

8 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

9 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

9 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

10 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

10 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

11 hours ago

This website uses cookies.