Categories: தமிழகம்

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன் : போலீசாரிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்ததால் ஏற்பட்ட விபரீதம்.!!

திண்டுக்கல் : ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு போலீசார் விசாரணையின் போது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற கணவர் ஆபத்தான நிலைமையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டிகோ ரெயான். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஜெப்ரின் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் இந்த தம்பதியினர் திண்டுக்கல் ஒய்எம்ஆர் பட்டி பகுதி நடுத்தெருவில் உள்ள மாடி வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர்.

ஸ்டிகோ ரெயானுடன் அவரது தாயாரும் இருந்து வந்துள்ளார். தற்பொழுது கோயம்புத்தூரில் வேலைக்கு சென்று வந்த ஸ்டிகோ ரெயான் அவரது காதல் மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தனது காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்துக் கொண்டிருந்த போது இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளார்.

போலீசார் ஸ்டிகோ ரெயானை பிடிக்க முயற்சி செய்தும் முடியாத நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த ஸ்டிகோ ரெயான் தலை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் ஸ்டிகோ ரெயான் பிடித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டிகோ ரெயான் வீட்டிலிருந்து ஜெப்ரின் உடலைக் கைப்பற்றிய நகர் வடக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டிகோ ரெயான் போலீசார் தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு போலீசார் விசாரிக்க வருவதைக் கண்ட கணவன் தப்பிக்க முயற்சித்து தலை மற்றும் கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமானது திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

1 hour ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

2 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

3 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

3 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

4 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

4 hours ago

This website uses cookies.