Categories: தமிழகம்

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன் : போலீசாரிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்ததால் ஏற்பட்ட விபரீதம்.!!

திண்டுக்கல் : ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு போலீசார் விசாரணையின் போது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற கணவர் ஆபத்தான நிலைமையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டிகோ ரெயான். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஜெப்ரின் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் இந்த தம்பதியினர் திண்டுக்கல் ஒய்எம்ஆர் பட்டி பகுதி நடுத்தெருவில் உள்ள மாடி வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர்.

ஸ்டிகோ ரெயானுடன் அவரது தாயாரும் இருந்து வந்துள்ளார். தற்பொழுது கோயம்புத்தூரில் வேலைக்கு சென்று வந்த ஸ்டிகோ ரெயான் அவரது காதல் மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தனது காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்துக் கொண்டிருந்த போது இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளார்.

போலீசார் ஸ்டிகோ ரெயானை பிடிக்க முயற்சி செய்தும் முடியாத நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த ஸ்டிகோ ரெயான் தலை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் ஸ்டிகோ ரெயான் பிடித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டிகோ ரெயான் வீட்டிலிருந்து ஜெப்ரின் உடலைக் கைப்பற்றிய நகர் வடக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டிகோ ரெயான் போலீசார் தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு போலீசார் விசாரிக்க வருவதைக் கண்ட கணவன் தப்பிக்க முயற்சித்து தலை மற்றும் கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமானது திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

12 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

14 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

14 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

15 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

16 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

16 hours ago

This website uses cookies.