விழுப்புரம் : குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி படுகொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). இவர் திண்டிவனத்தில் தனியார் பேருந்து நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் இவரது மனைவி செல்வி (வயது 55) என்பவருக்கும் ஏழுமலைக்கும் இடையே இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை மனைவி செல்வியை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அங்கிருந்து தப்பித்துச் சென்று திண்டிவனம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை வெட்டி படுகொலை செய்த இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
This website uses cookies.