Categories: தமிழகம்

கொழுந்தியாளை கடத்திச் சென்று ரகசிய குடித்தனம் : கணவனிடம் இருந்து வந்த கடைசி கால்.. சாம்பலான கொடூரம்!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பந்தியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மூத்த மகளான செல்வ தேவியை தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த நம்பி ராஜா என்பவர் சில ஆண்டுகளுக்கு திருமணம் செய்திருந்தார்.

மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நம்பி ராஜா கிருஷ்ணனின் இரண்டாவது மகளான பல் மருத்துவர் நீலவேணியிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது.

இதை அறிந்த நீலவேணியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் கள்ளக்காதல் ஜோடியான இருவரும் அதை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பல் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச் சென்ற நீலவேணி வீட்டிற்கு திரும்பவில்லை.

பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நம்பிராஜா தனது கொழுந்தியான நீலவேணியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் அழைத்து பேசினாலும் இருவரும் பிரிந்து செல்ல தயார் இல்லாமல் ஊரை விட்டு நாகர்கோவில் சென்றுள்ளனர்.

பின்னர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நீலவேணிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பி ராஜா நீலவேணியின் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து இன்று நம்பிராஜா தனது மனைவியான செல்வதேவியை செல்போனில் தொடர்பு கொண்டு, உனது தங்கை உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது எனவும் அவரை பார்க்க விரும்பினால் உடனடியாக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு வருமாறும் கூறியுள்ளார்.

அதை ஒட்டி செல்வதேவியின் தந்தை கிருஷ்ணனிடம் தகவலை கூறியதை தொடர்ந்து கிருஷ்ணன் தனது உறவினர்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார்.

அப்போது, இன்று காலை நீலவேணி உயிரிழந்ததாகவும் அவரது கணவர் எனக்கூறி நம்பிராஜா நீலவேணியின் சடலத்தை பெற்று அமரர் ஊர்தியில் நாகர்கோயில் அருகே புளியடி பகுதியில் உள்ள அரசு மின்மயானத்தில் தகனம் செய்ததாகவும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் நாகர்கோவிலில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரை சந்தித்து நம்பிராஜா மீது புகார் அளித்துள்ளார்.

கொழுந்தியாளை கடத்திச் சென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட பின்பு மருத்துவமனையில் அனுமதித்து உயிரிழந்த போது யாருக்கும் தெரியாமல் உடலை தகனம் செய்த நம்பிராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

2 minutes ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

1 hour ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

2 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

This website uses cookies.