இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஜெயலலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டங்களை அளித்தார்.
மாநிலத்தில் முதல்வர் வேந்தராக பொறுப்பில் இருக்கும் ஒரே பல்கலைக்கழகம் ஜெயலலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டமளிப்பு விழாவில், பிரபல திரைப்பட பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் இசை கலைஞர் பி.எம்.சுந்தரம் அவருக்கும் டாக்டர் பட்டத்தை முதல்வர் வழங்கினார்.
அதன் பிறகு பேசுகையில், தான் பாடகி பி.சுசீலாவின் ரசிகர் என வெளிப்படையாக கூறினார். மேலும் இதனை இன்று மேடைக்கு வருமுன்னே அவரை சந்தித்த உடன் அவரிடமே கூறிவிட்டேன் என மேடையில் கூறி பி.சுசீலா பாடிய “நீ இல்லாத உலகில் நிம்மதியில்லை” என்ற பாடலை மேடையில் பாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான், இந்த பல்கலைக்கழகம் 2013இல் தொடங்கப்பட்ட போது, மாநில முதல்வர் தான் வேந்தராக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மாநிலத்தில் முதலமைச்சர் வேந்தராக இருக்கும் ஒரே பல்கலைக்கழகம் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் தான் அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என வெளிப்படையாக கூறினார் தமிழக முதல்வர்.
மேலும், நான் வேந்தர் பதவி குறித்த அரசியல் பேச விரும்பவில்லை. அதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நல்ல கருத்துக்களை நேற்று கூறியுள்ளனர். விரைவில் நல்ல முடிவுகள் வரும் எனவும் முதல்வர் கூறினார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் முதலமைச்சர் வேந்தராக இருந்தால் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு நல்லது. கல்வி பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற வேண்டும். இது தமிழகத்திற்காக மட்டும் கூறவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் சேர்த்துதான் கூறுகிறேன். அனைவர்க்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்க கூடாது நலிந்த கலைகள் மேம்பட வேண்டும் என்றும் தனது உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.