மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரது மறைவு பற்றி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: நாட்டிலே இருக்கக்கூடிய மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி அவர்களுடைய மறைவு என்பது இந்த நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு.
மேலும் படிக்க: 200 திமுக ஜெயிக்கணும்… 34 தொகுதி எதிர்க்கட்சிகளுக்கு விட்டறணும் : இதுதான் நடக்கணும்.. அமைச்சர் துரைமுருகன்!
என்றுமே தன்னுடைய கொள்கைகளிலிருந்து மாறாமல், அதே நேரத்தில் ஒரு அறிவார்ந்த விவாதங்களில், யாரும் மறுக்க முடியாத விவாதங்களை, எந்த காழ்ப்புணர்வும் இல்லாத விவாதங்களை முன் வைக்கக் கூடிய மிக முக்கியமான ஒரு தலைவர்.
இன்று அவர் மறைவு என்பது இந்த நாட்டிற்கும் பெரும் இழப்பாகும். மேலும்,தனிப்பட்ட முறையில் அவர்களுடன் பணியாற்றக்கூடிய பல்வேறு வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருக்கிறது. இளைஞர்களுக்கு எப்போதும் உத்வேகம் தரக் கூடிய ஒரு தலைவர். அவரை இழந்திருப்பது, எனக்குத் தனிப்பட்ட முறையிலும் மிகப்பெரிய இழப்பாகக் கருதுகிறேன்.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.