Categories: தமிழகம்

ரூ.4,000 கோடி செலவு பற்றி விவாதிக்க நான் தயார்.. மழை பாதிப்புகளில் அரசியல் செய்யாதீங்க : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ரூ.4,000 கோடி செலவு பற்றி விவாதிக்க நான் தயார்.. மழை பாதிப்புகளில் அரசியல் செய்யாதீங்க : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில் தொடர்ந்து வார இறுதி நாட்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 3000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது சென்னை சைதாப்பேட்டை கோதாமேடு பகுதியில் நடைபெற்ற மழைக்கால மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் 3000 க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 679 இடங்களில் நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதில் சென்னையில் 679 இடங்களிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 இடங்களிலும் காஞ்சிபுரத்தில் 100 இடங்களிலும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இந்த மருத்துவ முகாமின் மூலம் மழைக்கால நோயான மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மருத்துவம் பார்த்து மருத்து கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் கடந்த 6,7,8 ஆகிய தேதிகளில் 160 மருத்துவ வாகனம் மூலம் 2147 நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதன் மூலம் 1,69,421 பேர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 867 பேருக்கு காய்ச்சல் பாதிப்பும் 13,372 பேருக்கு இருமல் மற்றும் சளி பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது என்றார்.

தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தொடர்ச்சியாக 6 வாரம் மருத்துவ முகாம் நடைபெற்று இருக்கிறது. இந்த வாரம் ஏழாவது வாரமாக மருத்துவ முகாம் நடைபெறுகிறது, இன்னும் 3 வாரம் நடைபெற உள்ளது. கடந்த 6 வாரமாக 13,734 மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதன் மூலம் 6,50,585 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

புயல் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள பொது மக்கள் காய்ச்சிய குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும், குடிநீரில் உள்ள குளோரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும், தட்டமை தடுப்பூசியை 9 மாதம் நிறைவு பெற்ற குழந்தைகள் முதல் 15 வயது உள்ளவர்கள் வரை தட்டமை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கூறினார்.

மக்கள் கோபமா ?? மா.சு.விளக்கம்

மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் மக்களை சந்தித்தோம் ஆனால் மக்கள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஒரு சில இடங்களில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்த காரணம் அதிமுக போன்ற கட்சிகள் மக்களை தூண்டிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தி அதனை வீடியோவாக வெளியிடுகிறார்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது வேண்டும் என்று விமர்சனம் செய்பவர்கள் மனசாட்சியுடன் யோசித்துப் பார்க்க வேண்டும். வேலை செய்பவர்களின் மனசை கஷ்டப்படுத்தக் கூடாது என்றார்.

அரசியல் செய்ய பல காரணங்கள் இருக்கிறது ஆனால் மழை பாதிப்புகளில் அரசியல் செய்ய வேண்டாம், சென்னையில் 4000 கோடி ரூபாய் மழை நீர் வடிகால் பணி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். என்னோடு வாருங்கள் பணிகளை நேரில் காட்டுகிறேன். அரசியல் கட்சிகள் யாராக வந்தாலும் நான் நேரடியாக விவாதிக்க தயார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

9 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

10 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

11 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

12 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

14 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

15 hours ago

This website uses cookies.