Categories: தமிழகம்

அண்ணாமலை இப்படி கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை : அமைச்சர் பொன்முடி வருத்தம்!!

தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர்  எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தினேன்  இதனை அண்ணாமலை கொச்சைப் படுத்துவோர் என எதிர்பார்க்க வில்லை என அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள ஊராட்சி முகமை அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ,உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி திராவிடம் என்ற வார்த்தை 1800 களில் தோன்றியதாக அண்ணாமலை கூறுகிறார் ஆனால் திராவிட மாடல் என்பது திராவிட இயக்கமல்ல சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியபோதே  தோன்றியதாக கூறி வருவதாகவும்  அதனை வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசி வருவதாக குற்றச்சாட்டிய அவர் தமிழக முதலமைச்சர் கல்வியை உயர்த்துவதற்கு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.

மத்திய அரசு புதிய கல்விகொள்கை என்று கூறுகிறார்கள் தமிழ்நாட்டிற்கு என்று கல்விக் கொள்கை வளர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்து கொள்கையை உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டுள்ளார், அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும், தமிழ்நாட்டில் உயர்கல்வி என்பது உயர்ந்திருக்கிறது.

தரத்தை உயர்த்த வேண்டும் என்பதால் நான் முதல்வன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் துறைகளுக்கிடையே இன்டர் டிசிபிளைனரி என்ற புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டுமென ஆணையிட்டு இருக்கிறார், திராவிடம் வந்த பிறகுதான் எல்லாம் வந்ததாக கூறுகிறாரே அண்ணாமலை அந்த காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் கல்வி அறிவு பெற முடியாமல் பள்ளிக்குள்ளே நுழைய முடியவில்லை படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமலும்  ஒரு சமுதாயத்தினர் மட்டுமே கல்வி அறிவு பெற்றனர். 

அனைத்து சமுதாயத்தினரும் ஆண்களும் பெண்களும் கல்வி அறிவு பெற வேண்டுமென்பது தான் திராவிடம் மாடல் என்றும் பிரதமரிடம் நிதி அளிக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை  முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தான் அன்பாக கேட்டுக் கொண்டேன், அதனையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

மத்திய அரசு நான்காண்டுகளில் உயர்கல்விக்கு ரூ.6,664 கோடி தமிழகத்திற்கு வழங்கியதாக கூறுகிறார். தமிழக அரசு மட்டும் ஒரு ஆண்டில் உயர் கல்விக்கு செலவு செய்த தொகை 5 ஆயிரத்து 666 கோடி, இதுபோன்று கல்விக்கு அதிகளவு செலவு செய்து வருகிறோம்.

மொழிக் கொள்கைகளைப் பற்றியும், சுதந்திரமாக செயல்படவிடுங்கள் என்று தான் கேட்பதாகவும், பிரதமரிடம் நிதி உதவி கேட்கவில்லை இதனை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும் அடித்தட்டு மக்களுக்கும் பயன்பெற வேண்டும் என்று உழைப்பது தான் இந்த இயக்கம் என்றும் திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு தான் இந்தியாவில் தமிழகத்தில்தான் 53 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்றுள்ளனர். இதனை  அண்ணாமலை கொச்சைப்படுத்துவோர் என எதிர்பார்க்கவில்லை முருகனைப் போன்று பெரிய பதவிகளுக்கு அவரும் ஆசைப்படலாம் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

8 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

9 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

11 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

11 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

11 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

12 hours ago

This website uses cookies.