கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், வடசேரி, வெட்டூர்ணிமடம், களியங்காடு, கோணம், பார்வதிபுரம் பகுதிகளில் நேற்று இரவு 7 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் வராததால் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். குழந்தைகள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மின்விசிறிகளை இயக்க முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.
கோட்டார் பகுதியில் இரவு 10 மணிக்குப்பிறகு மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள், கடை ஊழியர்களும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். இதேபோல் குலசேகரம், வெண்டாலி கோடு, மாமூடு, பொன்மனை, திற்பரப்பு, திருநந்திக்கரை பகுதிகளில் மாலை 6 மணிக்கு சென்ற மின்சாரம் இரவு 11 மணிக்குத்தான் வந்தது. 5 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
குமரி மேற்கு மாவட்ட பகுதியில் மின்தடை ஏற்பட்டதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மின்வாரிய ஊழியரிடம், மின்சாரம் எப்போது வரும் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஊழியர், மின்சாரம் எப்போது வரும் என்று எங்களுக்கு தெரியாது.
மந்திரிகளிடம் தான் போய் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தார். மின்வாரிய ஊழியரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் மின்தடை குறித்து பல்வேறு கருத்துக்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.
மின்தடை குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மின் தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.