கோவை : கோவையில் காணாமல் போன தனது ஆட்டோவை ஓட்டுனர் ஒருவர் வீதி வீதியாக தேடி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 25 வருடமாக காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி பூ மார்க்கெட் பகுதியில் அமுதசுரபி உணவகம் எதிரே ஆட்டோவை நிறுத்தி விட்டு கணேசன் உணவு அருந்த சென்றுள்ளார்.
இந்த நிலையில் சரியாக 10 மணியளவில் மர்ம நபர் அவரது ஆட்டோவை லாவகமாக தள்ளிச் சென்று உள்ளார். அதன் பின்னர் கணேசன் பல்வேறு பகுதிகளில் ஆட்டோவை அலைந்து தேடியுள்ளார்.
பின்னர் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே காணாமல் போன ஆட்டோவை தேடி காந்திபுரம், கவுண்டம்பாளையம், வடகோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நடந்து ஆட்டோவை தேடி வருகிறார்.
இந்த நிலையில், தனது வாழ்வாதாரம் ஆட்டோ மட்டுமே என்றும், எப்படியாவது தனது ஆட்டோவை மீட்டுத்தர வேண்டும் என்றும் வேதனையுடன் தெரிவிக்கிறார் கணேசன்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.