Categories: தமிழகம்

எனக்கு புகழ் தேவையில்லை, இருக்கும் புகழே போதும் : உயிருள்ளவரை மக்களுக்காக உழைப்பேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

அரசு விழாக்கள் பொழுதுபோக்கிற்கிற்காக நடக்கும் விழாவே எங்களது புகழ் பாடுவே நடக்கும் விழாக்கள் அல்ல என்றும் மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள் என ஈரோட்டில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.261.57 கோடி மதிப்பீட்டில் 135 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.183.70 கோடி மதிப்பில் 1,761 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு 167.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு என்பது தமிழராகிய நாம் உணர்வோடு கலந்த ஊர் என்றும் பெருந்துறை அருகே திங்களுரில் தமிழ்சங்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது என்றார்.

சிலர் செய்யும் பணி அடக்கமாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கும் என்ற ஸ்டாலின் கடந்த ஓராண்டில் காலத்தில் பல்வேறு துறைகள் சார்பில் எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்த பணிகளை பட்டியலிட்டார்.

10 கோடி ரூபாய் மதிப்பில் மஞ்சள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மஞ்சள ஆராய்ச்சி மையம் மேம்படுத்தப்படும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என்றும் , ஈரோடு , தாளவாடி , நல்லாம்பட்டி , போன்ற பகுதிகளில் சுமார 6 கோடி மதிப்பில் குளிர்பாதன கிடங்கு அமைக்கப்படும் என்ற ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தை அனைத்திலும் முதன்மையாக மாற்ற பணிகளை செய்து வருவதாகவும் , அவினாசி – அத்திகடவு திட்ட பணிகளை பார்வையிட்டு துரிதமாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் , சில மாதங்களில் பணிகள் முடிவுற்று நானே தொடங்கி வைப்பேன் என்று உறுதளித்தார்.

அரசு விழாகள் பொழுதுபோக்கிற்கிற்காக நடக்கும் விழா அல்ல, எங்களது புகழ் பாடுவே நடக்கும் விழாகள் அல்ல என்றும் மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் , எனக்கு புகழ் தேவையில்லை என்றும் இருக்கும் புகழே போதும், என் உயிர் இருக்கும் வரை மக்களுக்காக உழைப்பேன் என்றார்.

அனைத்து தர மக்களும் உயர்வு பெறும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்து மூலம் மக்களை மட்டுமல்ல மண்ணை காக்கும் அரசாக இந்த அரசு செயல்படுகிறது என்றும் தமிழக வரலாற்றில் வேளாண்துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியிட்டு சாதனை படைத்துள்ளதாகவும் , குறுவை சாகுபடிக்காக முன் கூட்டியே திறந்து கடைமடை பகுதி வரை நீர் செல்ல தூர் வாரப்பட்டுள்ளது என்றார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு உயர்நீதிமன்றம் சட்டபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதை அண்ணா, பெரியார் இருந்திருந்தால் சந்தோசம் அடைந்து இருப்பார்கள்.

இது நமது கொள்ககைக்கு கிடைத்த வெற்றி என்றார். திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியும் அரசாக வழங்கி வருவதாகவும் , இல்லம் தேடி கல்வி , பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் , வீடு தேடி மருத்துவம் என தமிழக திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருவதாகவும் , தமிழகத்தில் சிசு மரணம் குறைவு , பட்டினி சாவு இல்லை என்ற ஸ்டாலின் இதற்காக நித்தமும் உழைக்கிறேன் என்ற ஸ்டாலின், நான் வாழ்ந்த காலத்தில் தமிழ் சமுதாயம் நிமிர உழைப்பதாகவும் , கோட்டையில் இருந்தாலும் உங்கள் உள்ளங்களில் வாழ்கிறேன் என்று விழாவில் பேசினார்.

முன்னதாக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி , தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி , மு.பெ.சாமிநாதன் , கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…

3 hours ago

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

4 hours ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

5 hours ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

5 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

6 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

6 hours ago

This website uses cookies.