எனக்கு கோபி வேண்டாம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலனை கொலை செய்த பெண் : திருவள்ளூரில் பயங்கரம்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கோபி என்கிற கோபால கிருஷ்ணன் 27 என்ற இளைஞருக்கும் சிவன் கோவில் தெருவை சேர்ந்த திருமணம் ஆன பிரியா என்கிற பெண்ணுக்கும் முறை தவறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரியாவிற்கு சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கோபிக்கும் ப்ரியாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த 13ஆம் தேதி பிரியாவின் கள்ளக்காதலன் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்து திருஆயர்பாடியில் புளியந்தோப்பு தெருவிற்கு பிரியா மூலம் வரவழைத்து அவரது கண் முன்பாகவே சரமாரியாக வெட்டிவிட்டு கள்ளக்காதலன் ஆனந்த் என்பவருடன் சேர்ந்து 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியது.
ரத்த வெள்ளத்தில் அங்கேயே கோபாலகிருஷ்ணன் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலிசாருக்கு தகவல் அளித்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குஅவர் உயிரிழந்தது தெரியவந்ததை தொடர்ந்து பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை மேற்கொண்டு பிரியாவை கைது செய்து அவரது கள்ள காதலன் சென்னையைச் சேர்ந்த ஆனந்த் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட நான்கு பேரை அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் கொலையாளிகளை பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்த், அஜித் குமார், சரத்குமார் வல்லவன் உள்ளிட்ட 4 பேரை தேடி வந்த நிலையில் எழும்பூர் பகுதியில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் மூன்று பேரை கைது செய்தனர் .
மேலும் தலைமறைவாக இருந்த வல்லவன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய இரண்டு கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.