Categories: தமிழகம்

யாருக்கும் பாரமா இருக்க விரும்பல… கணவன் மனைவி செய்த விபரீதம் : திருப்பூர் அருகே சோக சம்பவம்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூரில் உள்ள எஸ்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் தனது மனைவி வசந்தா (55)வுடன் வசித்து வந்துள்ளார்.

இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணமாகி திருப்பூரில் தனித்தனியே குடும்பமாக வசித்து வருகின்றனர்.

வசந்தாவிற்கு உடல் ரீதியாக பிரச்சனை உள்ளதால் தினந்தோறும் மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு காரணமாக மருத்துவரை அணுகியுள்ளனர். வீட்டிலேயே இருந்து மாத்திரையை உட்கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார்.

கணவன் மனைவி இருவருமே கடந்த வாரம் வசந்தா அவரின் அம்மா செல்லம்மாளிடம் (75) தங்களுக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் யாருக்கும் தொல்லையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் விஷம் அருந்தி தற்கொலையில் ஈடுபட்டனர்.

இன்று காலை அக்கம் பக்கத்தினர் கதவு பூட்டி இருந்ததை பார்த்து சென்ற பொழுது இருவரும் இறந்த நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக பெருமாநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து இருவரின் உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பெருமாநல்லூர் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

2 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

3 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

4 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

4 hours ago

‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!

குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…

5 hours ago

உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!

கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…

5 hours ago

This website uses cookies.