Categories: தமிழகம்

அமைச்சரை தூக்கி உள்ளே வெச்சுருவேன்… கேட்க ஆள் இல்லைனு சர்வாதிகாரம் பண்றாங்க : பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!!

அமைச்சரை தூக்கி உள்ளே வெச்சுருவேன்… கேட்க ஆள் இல்லைனா சர்வாதிகாரம் பண்றாங்க : பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட அறநிலையத்துறையால் கொடுக்க முடியவில்லை. 22 ஆயிரத்து 600 ஏக்கர் காலி இடங்களுக்கு கடந்த 8 மாதத்தில் மட்டும் வாடகை பாக்கி ரூ.151 கோடி வர வேண்டி உள்ளது. பழமையான தொன்மையான 5 ஆயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறிவிட்டு, அதில் கமிஷன் அடிக்கிறார்கள்.

அறநிலையத் துறை அமைச்சர் உள்பட அனைவருக்கும் கோயில் வருமானங்கள் மூலம்தான் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. அமைச்சரின் 2 உதவியாளர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் சம்பளமாம். என்ன சார் அநியாயம் இது.. கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்காக அறநிலையத் துறையில் சர்வாதிகாரமாக செயல்படுகிறாங்க.
இதையெல்லாம் சொன்னால் நான் விளம்பரத்திற்காக செயல்படுவதாக குற்றம்சாட்டுறாங்க,.. விளம்பரத்திற்கு நான் அடிமை கிடையாது.
இன்னும் 15 வருடத்தில் 26 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள்.

அர்ச்சகர்களை காப்பாற்ற சம்பளம் கொடுக்க வேண்டும். கோவில்களில் அனைத்தையும் செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்களை காப்பாற்றவில்லை என்றால் கோவில்கள் காலியாகிவிடும். அர்ச்சகர்கள் இல்லை என்றால் கோயில் சொத்துக்கள் சூறையாடப்படும்.

எந்த வேலையும் செய்யாத அதிகாரிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக சம்பளமாம். ஆனால், அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் அர்ச்சகர்களுக்கு வெறும் 4500 ரூபாய்தான் சம்பளம் என்கிறார்கள்.

வசதி இல்லாத 1500 ஆண்டுகளுக்கு முன்பான 10 ஆயிரத்து 652 தொன்மையான கோவில்கள் அனைத்தும் கேட்பாரற்று உள்ளது. பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும். இல்லையென்றால் சீரழிந்துவிடும்.

சைவ வைணவர்களின் ஒற்றுமை உடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இருந்து 2 ஆயிர்து 622 சிலைகள் மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2012-ம் ஆண்டு முன்பு ஏன் இந்தளவு சிலைகள் மீட்க முடியவில்லை. அமெரிக்க காவல்துறையுடன் சிலைகளை மீட்க ஒத்துழைக்க வேண்டும்.

இதற்கு மத்திய அரசுடன் பேசி மீதமுள்ள சிலைகளை மீட்க நடவடிக்கைவேண்டும். வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியில் அமர்த்தக்கூடாது. மிகவும் நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டிய துறையாக அறநிலையத்துறை உள்ளது.

ஆர்வம் குறைவான அதிகாரிகளை உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டதால் 2020 ல் இருந்து பல முக்கிய வேலைகளை நான் செய்யவில்லை. கடந்த மாதம் கோவில்களில் இருந்து ரூ.28.49 கோடி எடுத்துள்ளனர்.

நான் மட்டும் மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டால் அறநிலையத் துறை அமைச்சர் உள்பட துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன்.

அறநிலையத் துறை பற்றி பேசினால் நான் பாஜகவில் சேரப்போவதாகவும் பதவிகளைப் பெறப்போவதாகவும் சொல்கிறார்கள். நான் எந்தக் காலத்திலும் கட்சியில் சேரமாட்டேன். அப்படி சேர்ந்தால் என் சட்டைக் காலரை பிடித்து நீங்கள் கேள்வி தாராளமாக கேட்கலாம்” என பொன் மாணிக்கவேல் ஆவேசமாக பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

9 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

9 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

10 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

11 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

13 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

14 hours ago

This website uses cookies.