தமிழகம்

ரவுடிகளுக்கே டஃப் கொடுக்கும் லேடி.. உன்னை கொல்லாமல் விடமாட்டேன் : காவலரை மிரட்டிய பெண் கைது!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் காவலர் அரசு பணியில் இருந்தார் .

நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து நாமக்கல் ,சேலம் ,அரியலூர் ,போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் பிரிந்து செல்கின்ற மிக முக்கியமான இடமாகும் .

இச்சாலையில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன .

அந்த வகையில் நேற்று சேலத்தில் இருந்து டால்மியாபுரம் நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் சமையல் எரிவாயு டெலிவரி செய்யும் ஒருவர் மோதி இருசக்கர வாகன ஓட்டி நிலை தடுமாறி கீழே விழுந்தார் .

இதனைஅடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் அரசு அவர்களை மீட்டு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கிரிஜா என்கின்ற பெண் காவலரிடம் நான் ஒரு செய்தியாளர் எனவும் நான் ஒரு வழக்கறிஞர் எனவும் உங்களால் என்ன செய்ய முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ₹11 லட்சம் பரிசு.. பாஜக கூட்டணி எம்எல்ஏ சர்ச்சை அறிவிப்பு..!!

காவலரை தகாத வார்த்தைகளில் கடுமையாகத் திட்டியுள்ளார் . இச்சம்பவம் குறித்து காவலர் அரசு கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

அப்புகாரில், பணியில் இருந்த என்னை பணியாற்ற விடாமல் தடுத்ததாகவும் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் அருகிலிருந்த பூக்கடையில் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த குடையை எடுத்து வைத்து என்னை தாக்க முற்பட்டதாகவும், மேலும் அந்தப் பெண் லாரி ஓட்டுநரை தாக்க முற்பட்டதாகவும் அதை தடுக்கச் சென்ற காவலரை உன்னை நான் காலி செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டியதாக புகார் அளித்தார் .

புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர் . கிரிஜா என்பவர் கடந்த ஆண்டு காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுகுமார் மீது பாலியல் தொந்தரவு கொடுத்தார் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல்வேறு இடங்களில் சென்று நான் ஒரு பத்திரிக்கையாளர் எனவும் வழக்கறிஞர் எனவும் கூறி பல்வேறு இடங்களில் இப்பெண் பலருக்கும் தொந்தரவு கொடுத்த வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது .

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

13 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

15 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

16 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

16 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

17 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

18 hours ago

This website uses cookies.