விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டியில் முன்னாள் மறைந்த விவசாய துறை அமைச்சர் ஏ. ஜி. கோவிந்தசாமி மற்றும் இட இதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு 9 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மணிமண்டப பணியை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு செய்தார்கள்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மணி மண்டபம் கட்டப்பட்டு வரும் பணிகள் முடிந்துவிட்ட தருவாயில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மணிமண்டபத்தில் ஏஜி கோவிந்தசாமி சிலைகள் வைக்கபட்டு பிறகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மணி மண்டபத்தை திறந்து வைப்பார்கள் என்றும் வரலாற்றை எடுத்து சொல்லும் வகையில் இந்த மணி மண்டபம் அமையும் என தெரிவித்தார்.
நீட் தேர்வு தேவை என அண்ணாமலை கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி. நீட் தேர்வு வேண்டும் என அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால் நீட் தேர்வு கூடாது என்று சொல்லுகிற பாட்டாளி மக்கள் கட்சி அவர்களுடன் தான் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்கள் என்றும் கொள்கை அடிப்படையில் இந்திய அளவில் ஸ்டாலின் தலைமையில் இருந்த அணிகள் நீட் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்போது இந்திய அளவில் நீட் தேர்வு எதிர்ப்பு வலுத்து வருவதாகவும்,நீட் மோசடி குறித்து உச்ச நீதிமன்றமும் அதனை கண்டித்திருப்பதால் நீட் தேர்வு மோசடிகள் இந்திய மக்கள் உள்ளங்களிலையே ஊறி இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.