Categories: தமிழகம்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1 சவரன் தங்கம் ₹1 லட்சம் ஆகும் : திண்டுக்கல் சீனிவாசன் பரபர..!!!

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1 சவரன் தங்கம் ₹1 லட்சம் ஆகும் : திண்டுக்கல் சீனிவாசன் பரபர..!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம்.விசுவநாதன் இரட்டை இலை சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரித்தனர்.

இந்தியாவில் முதற்கட்டமாக தமிழக முழுவதும் மக்களவை தேர்தல் இன்னும் 2 தினங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

தங்களின் கூட்டணி வேட்பாளர்களுக்காக அரசியல் தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கிராமப்புற பகுதிகளான ஊராளிபட்டி,சிறுகுடி அவிச்சிப்பட்டி, அரவங்குறிச்சி, செந்துறை, மணக்காட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் சென்று அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் முகமது முபாரக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விசுவநாதன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சிறுகுடியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது : இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆண்ட பாரதிய ஜனதா கட்சி நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும், பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க: GST பற்றி கமலுக்கு ஒண்ணுமே புரியல.. ஏதோ சினிமா வசனம் நினைச்சு பேசுறாரு : வானதி சீனிவாசன் அட்டாக்!

அதேபோல் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருவதாகவும் இனிமேல் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாது என்றும், அதற்காக வீட்டில் உள்ளவர்களுக்கு தங்கத்தின் பெயரில் தங்கராசு, தங்கம் என்று பெயர்தான் வைக்க முடியும் என்றும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயாக விலை உயர வாய்ப்புள்ளதாகவும் இவற்றை கட்டுப்படுத்த முடியாது என்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தினந்தோறும் மக்களை காப்பாற்ற அதிமுக கூட்டணியான எஸ்.டிபி.ஐ கட்சியில் திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிடும் முகமது முபாரக் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார் அவர். இதில் அதிமுக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…

47 minutes ago

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

1 hour ago

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

2 hours ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

3 hours ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

16 hours ago

This website uses cookies.