தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
சென்னை: இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.
அதற்குப் பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது தேசிய கீதம் இசைக்கக் கூறியும் இசைக்கப்படாததால், தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி, ஆளுநர், அரசு தயார் செய்து கொடுத்த உரையை வாசிக்காமல், 3 நிமிடங்களிலேயே அவையை விட்டு வெளியேறினார்.
இதற்கான விளக்கத்தையும் ஆளுநர் மாளிகை அளித்திருந்தது. மேலும், “ஆளுநர் “தமிழ்த் தாய் வாழ்த்து” பாடலின் புனிதத்தை எப்போதும் நிலைநாட்டி, ஒவ்வொரு நிகழ்விலும் மரியாதையுடன் பாடி வருகிறார். பலமுறை முன்கூட்டியே இதற்கான நினைவூட்டல்களை தெரிவித்த பிறகும், இந்தக் கோரிக்கைகளை வேண்டுமென்றே தமிழ்நாடு சட்டப்பேரவை புறக்கணித்துள்ளது துரதிருஷ்டவசமானது.
ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது அல்லது இசைக்காமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும்” எனத் தெரிவித்து இருந்தது. இதற்கு விசிக, பாமக, சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்வினை ஆற்றி இருந்தன.
இதையும் படிங்க: பெண்ணின் உடையை கிழித்து தரதரவென இழுத்துச் சென்ற திருநங்கைகள்.. நெல்லையில் பயங்கரம்!
இதனிடையே, தமிழ்நாட்டில் அவசரகாலம் என ஆளுநர் குறிப்பிட்டு இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, திமுக உடன் கூட்டணியில் உள்ள சிபிஐஎம், அண்ணா பல்கலை வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பட்டாம் நடத்தும் கட்சியினருக்கு அனுமதி மறுப்பு, கைது உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி, அவசரகால நிலை என்னும் பதத்தை பயன்படுத்தி இருந்தார்.
குறிப்பாக, “தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்)” என முன்னாள் சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். அப்போது, அவருக்கு என்ன நெருடல் இருக்கிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.