Categories: தமிழகம்

நீட் தேர்வு ரத்து செய்யாவிட்டால் பிரதமரை வீட்டுக்கு அனுப்புவோம் : திமுக எம்.பி ஆ.ராசா பரபரப்பு பேச்சு!!

ஈரோடு : நீட் தேர்வு விலக்கு பெறுவதில் வெற்றி அடைவோம் ஒருவேளை அது முடியவில்லை என்றால் மோடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு திமுக சார்பில் ஆதரவு பெற்றவரை பிரதமராக ஆக்கவேண்டும் என்ற வேலைகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்ற வாரமே துவங்கிவிட்டார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசா பேசியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி, புஞ்சை புளியம்பட்டி நகராட்சி மற்றும் மூன்று பேரூராட்சிகளில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அ.ராசா அறிமுகப்படுத்தி பரப்புரையை துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகளுக்கு பதவி இல்லாமல் இருக்கலாம் ஆனால் முதலமைச்சரை அணுகி சத்தியமங்கலம் பகுதிக்கு போராடும் ஆற்றல் எங்களிடம் உள்ளது என தெரிவித்த அவர் வார்டுகளில் உள்ள மக்களின் குறைகள் என்ன என பட்டியலிட்டு நான் வெற்றி பெற்றால் அதை சரி செய்வேன் எனக் கூறி வாக்குகள் சேகரியுங்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும் அங்கொன்றும் இங்கொன்றும் தவறுகள் நடந்தாலும் தவறை சரிசெய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் தந்தையைப் போல் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் எனவும் வெளிப்படையான அரசாங்கம் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சிலர் கேட்பார்கள் திமுக தான் நீட் தேர்வுக்கு தீர்மானம் நிறைவேற்றியது என்ன ஆனது என்று, ஆனால் இதே ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சியில் 40 எம்பிக்கள் இருந்தபோது அதிமுக நீட் தேர்வு விலக்குக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று தமிழக கவர்னரை திரும்பப் பெறு என எங்களைப் போன்று யாரும் குரல் எழுப்பவில்லை எனவும் ஆனால் நாங்கள் குரல் எழுப்பினோம் என அவர் தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு விலக்கு பெறுவதில் மீண்டும் வெற்றி பெறுவோம் ஒருவேளை அப்படி முடியாவிட்டால் மோடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆதரவு பெற்றவர் தான் பிரதமராக வருவார் என தெரிவித்த அவர் அந்த பணியை நமது முதல்வர் சென்ற வாரத்தின் முதலே தொடங்கி விட்டார் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

5 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

5 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

5 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

6 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

6 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

7 hours ago

This website uses cookies.