Categories: தமிழகம்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு துணிவிருந்தால் அதை அறிவிக்க முடியுமா? அமைச்சர் பொன்முடி சவால்!

முடிந்தால் நாடாளுமன்றத்தில் அதை அறிவிக்க முடியுமா? பிரதமர் மோடிக்கு அமைச்சர் பொன்முடி சவால்!

தமிழக ஆளுநரும், பிரதமரும் மத வெறியை தூண்டிவிட்டு ஆதாயம் தேட வேண்டும், மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் எண்னம் ஆளுநருக்கும் பிரதமருக்கும் இல்லை பாராளுமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென பிரதமர் கூறட்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா வீதியில் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை மற்றும் 45.96 லட்சம் மதிப்பீட்டில கட்டப்பட்ட புதிய பூங்காவினை உயர்கல்வி துறைதுறை அமைச்சர் பொன்முடி, திமுக எம் எல் ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து காட்டுமன்னார் கோவில் அருகேயுள்ள அதனூர் கிராமத்தில் 100 பட்டியலினத்தவருக்கு பூ நூல் அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாட்டில் சாதிய ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பதாக தெரிவித்தற்கு பதிலளித்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, பிராமணர்கள் இருப்பவர்கள் மட்டுமே பஞ்சு நூலில் பூனுல் அணிய வேண்டும் என்ற காலம் இருந்தது.
அதனை எல்லாம் மாற்றி அனைத்து சாதியினரும் மட்டுமல்ல ஏழு மகளிரும் அர்ச்சகராகலாம் என கூறியது தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் ஜாதி வேறுபாடு தமிழ்நாட்டில் இருக்கிறது என்று கூறும் ஆளுநர் பீகார் மாநிலத்திற்கு சென்று ஜாதிய வேறுபாடு குறித்து பேச வேண்டும்.

நந்தனார் வழியில் தான் எல்லோரும் அர்ச்சகராக ஆகலாம் என தமிழக திமுக ஆட்சியில் கூறபட்டு வருகிறது. நீதிகட்சி காலத்திலிருந்து இந்து கோவில்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம என்ற நிலை தமிழகத்தில் இருந்து வருவதாகவும், பிரதமர் அதனை தெரிந்துகொண்டு பேச வேண்டும் திருவள்ளுவருக்கே பூனுல் போட்ட காலமுண்டு என கூறினார்.

எத புகுத்த வேண்டும் என்று மக்களுக்கு நன்றாக தெரியும் மத வெறியை தூண்டிவிட்டு ஆதாயம் தேட வேண்டும் என்ற சூழ்ச்சிகள் தான் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் எண்னம் ஆளுநருக்கும் பிரதமருக்கும் இல்லை. பாராளுமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென பிரதமர் கூறட்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

15 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

15 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

17 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

17 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

18 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

18 hours ago

This website uses cookies.