Categories: தமிழகம்

அரசு வேலை வேண்டுமென்றால் அரவணைக்க வேண்டும் : கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணிடம் திமுக பிரமுகர் அத்துமீறல்… காவல்நிலையம் முற்றுகை!!

விருதுநகர்: மம்சாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கணவனைப் பிரிந்து தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப வருமானத்திற்காக அப்பளம் மற்றும் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்து வருகிறார்.

வீடு வீடாகச் சென்று விற்று அதில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில், முன்னாள் பேரூர் கழக துணைத் தலைவரும், திமுக பிரமுகருமான அய்யனார் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.மேலும் பெண்ணிற்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் அதற்காக தான் சொல்லும் கட்சி முக்கிய பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார். அவர் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்ததால் தொடர்ந்து பெண்ணிற்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

‘இதனைத் தொடர்ந்து, தனது அடியாள்களுடன் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அய்யனார், ‘நான் சொல்லுவதை கட்டாயம் கேட்க வேண்டும்’ என மிரட்டல் விடுத்து பெண்ணையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த அப்பெண் மற்றும் அவரது தாயார் இதுதொடர்பாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், காவல் துறையினர் புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அப்பெண் திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறை தலைவர் ஆகியோருக்கும் புகார் மனு அளித்தார்.

ஆனால், இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பெண், திமுக பிரமுகர் அய்யனார் மற்றும் அவருடன் வந்த அடியாள்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தனது உறவினர்களுடன் மம்சாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வெயிட்டிங்கே வெறி ஆகுதே…அலற விடும் ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட்.!

குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…

28 minutes ago

முதலமைச்சரும் விஜய் ரசிகர் தான்.. PK வந்தது ஏன்? – ஆதவ் அர்ஜுனா பேச்சு!

75 வருடமாக கொள்கையைக் கொண்ட நீங்கள் என்ன மாற்றம் செய்தீர்கள்? என ஆளும் அரசுக்கு ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.…

34 minutes ago

மாத இறுதியில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…

3 hours ago

Get out பதாகை.. பிரமாண்ட விருந்து.. புதிய அறிவிப்புகள்.. தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவின் Highlights!

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…

3 hours ago

குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…

5 hours ago

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

17 hours ago

This website uses cookies.