சென்னை : கலைஞர் கருணாநிதி எனக்கு தந்தைக்கு சமம் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியாவில் இளையராஜாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா கலைஞர் கருணாநிதி எனக்கு தந்தைக்கு சமம் எனவும், இளையராஜா என்ற பெயரை நான் வைக்கவில்லை, சிவன் எப்படி சிவன் வைக்கவில்லையே அதேமாதிரி தான் எனக் கூறினார். மேலும், தனது தந்தை வைத்த ஞானதேசிகன் என்ற பெயர் வைத்ததை கலைஞர் கருணாநிதிதான் இசையுடன் சேர்த்து இசைஞானி எனப் பெயரிட்டதாக தெரிவித்தார்.
மேலும், அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர் தான் கலைஞர் எனவும், அவர் வழியிலேயே முதல்வரும் நாட்டை வழி நடத்தி செல்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்தார். தமிழக மக்களை முன்னேற்ற ஏராளமான பணிகள் செய்தவர் கருணாநிதி, அந்த பாதையில் நம்முடைய முதல்வர் செல்கிறார் எனவும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்வதையெல்லாம் தனக்கு செய்து வருவதாக ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
எனக்கென்று நான் இதுவேண்டுமென்று யாரிடமிருந்து எதுவும் கேட்கமாட்டேன் எனவும், எதற்கும் போனதில்லை என தெரிவித்த அவர், தமிழக மக்களை முன்னேற்ற கலைஞர் பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கு தெரியும் எனவும், அவரது வழியில் சென்று கொண்டிருக்கிற முதல்வரும் அவரது கனவை நிறைவேற்ற வைப்பார் என தெரிவித்தார்.
கோவை இசை நிகழ்ச்சியில் SPB-ஐ நினைவு கூர்ந்த இளையராஜா, என்னுடைய பிறந்த நாளுக்கு அடுத்த இரண்டு நாட்களில் SPBக்கு பிறந்தநாள் வருவதாகவும், நான் பிறந்த பிறகு இரண்டு வருடங்கள் கழித்து அவர் பிறந்தார் என கூறினார். மருத்துவமனைக்கு செல்லும் முன்பு நானும் எஸ்.பி.பியும் மூகாம்பிகை திருக்கோவிலுக்கு சென்றிருந்தோம் எனவும், இப்ப எஸ்.பி.பி இல்லை, அவருடைய மகன் இருக்கிறார் என நினைவு கூர்ந்தார். அப்பாக்களின் பையன்கள் என்னுடைய கச்சேரியில் பாட ஆரம்பித்து விட்டார்கள் எனவும், எஸ்.பி.பி மகன், மலேசிய வாசுதேவன் மகன் ஆகியோர் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் இளையராஜா உருவம் படைத்த தங்க நாணயம் வெளியிடப்பட்டது. விரைவில் விற்பனைக்கு வரும் என மேடையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
This website uses cookies.